தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்.
சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் ....
நாட்டுக்கு நன்மை.
நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வேண்டி வந்தாலும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையால் எல்லா அசிங்கங்களையும் மறைத்து புகை மேகத்துக்குள் இருப்பது, தேவலோகத்தில் இருப்பது போல, மேகத்துக்கிடையே சஞ்சரிப்பது போன்ற அனுபவம் தரும்.
சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப் புறத்தின் எந்த நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும் ஒன்றும் பெரிதாக தெரியாது.
சிகரெட் புகைக்குள் எப்போதும் மறைந்திருந்தால் கடன் காரர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.
சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக்கொள்ளலாம். முன் பின் தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.
எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது இரவு மின்வெட்டு ஏற்படும் போது மிக உதவியாக இருக்கும்.
சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம் இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொசு மருந்தையும் கலந்து தயாரித்தால். தனியாக கொசு வர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.
பிரச்சனைகள் வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்தித்து தலையை புண்ணாக்க வேண்டியதில்ல. டென்சனே தேவையில்லை ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால் போதும். தீக்குச்சியை உரசும் போது கோபத்தை வெளிப்படுத்தலாம், தீக்குச்சி எரிவதை ஒரு வினாடி ரசித்து அதில் எதிரியின் அழிவைக் கற்பனை செய்து ஆசுவாசப்படலாம், சிகரெட்டை பற்றவைத்து ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகை போல் ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்யலாம். எஞ்சிய துண்டு சிகரெட்ட நசுக்கித் தள்ளி ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளலாம்.
சிகரெட் பிடித்து லொக் லொக் கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கலாம். பிறர் கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம்.
அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்து விடும். முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும் . பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது.
தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கைத் தடியுடன் நடக்கும் நிலை ஏற்படும். துரத்தும் தெரு நாய்களை விரட்ட உதவும்.
இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வரும் பயமில்லை. வேறு தனியாக நாய்கள் வளர்த்த வேண்டியதில்லை.
வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம்.
எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில் உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய் விடும்.
வேண்டாத விருந்தாளியை விரட்ட புகையை அவர்கள் முகத்துக்கு நேரே அடிக்கடி ஊதி விட்டால் போதும்.
புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையை பார்க்கும் போது பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக்கொண்டு அதன் பக்கமே போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உதவும்.
மிகவும் அத்தியாவசியமாக இருந்தாலொழிய யாரும் அருகில் வந்து பேச்சுக் கொடுத்து தொல்லை பண்ன மாட்டார்கள்.
சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைகளை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரலாம்.
வாழ்வின் பிற்பகுதியில் டாகடர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அள்ளி அள்ளி தந்து வள்ளலாகலாம்.
சிகரெட் பாக்கெட்,காலி தீப்பெட்டி,எரிந்த தீக்குச்சி,சிகரெட்டின் எஞ்சிய துண்டுகள் போன்றவற்றை அதிகமாக சேர்த்து வைத்து சாதனை படைக்கலாம். கலைப் படைப்புகள் உருவாக்கலாம்.
வீட்டில் இறைந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளை சின்னக் குழந்தைகள் விரும்பி எடுத்து விளையாடுவதால் அவர்களுக்கு வேறு விளையாட்டுப் பொருட்கள் வாங்கத் தேவையில்லை.
மக்கள் நெருக்கமாக உள்ள இடங்களில் புகை பிடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்க்கலாம். கூட்டத்தில் தனியாக தெரியலாம்.
சில்லரைத் தேவைப்பட்டால் சட்டென ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி சில்லரை பெற்றுக் கொள்ளலாம்.
நாட்டில் பொறுப்பற்ற மக்களின் ஆயுளை குறைத்து மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.
சிகரெட் பிடிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருப்பதை கருத்தில் கொண்டு புகை பிடிப்பவர்கள் யாரும் இனி யாரைக்கண்டும் சங்கோஜப்படத் தேவையில்லை. நாம் எக்கேடு கெட்டாலும் பிறருக்கு உதவுகிறோமே நிம்மதியுடன் தொடருங்கள் சேவையை.
நன்றி - திரு முருகன் மந்திரம் அவர்கள்...
டிஸ்கி : பிடித்திருந்தால் தவறாமல் எனது பதிவுகளுக்கும் கீழே உள்ள பட்டனில் ஒட்டுப் போட்டுவிட்டுச் செல்லவும் நண்பர்களே.
14 comments:
இருந்திருந்து நான் மாய உலகத்தில் வந்து படிக்கிற முதல் இடுகை இதுவாகவா இருக்க வேணும்! க்ர்ர்ர்ர் இனி இந்தப் பக்கம் வர மாட்டேன். ;))
//நாம் எக்கேடு கெட்டாலும் பிறருக்கு உதவுகிறோமே// !! புகைக்கிறவங்களை விட சுத்தி இருக்கிறவங்களுக்குத் தான் பாதிப்பு அதிகம். ;( அவங்க ஃபில்டரை போட்டுட்டு உள்ள இழுப்பாங்க. நச்சு மீதி எல்லாம் காத்துல விட்டுருவாங்க. ;(
நிறைய விஷயங்களை தீப்பட்டி போல அடுக்கி இருக்கிறீர்கள்.
நல்ல மனசுல ஏறுகிற மாதிரி பத்த வைத்திருக்கிறீர்கள்.
புகைப் பிடிப்பவர்களுக்கு சாம்பல் பயத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்.
ஆமா
இவ்வளவு பேரு பயன்பெறுகிறார்களா!?
இது பயனான இடுகையா இல்லை அது அல்லாத இடுகையா குழப்பமாக உள்ளது.
அருமையான படைப்பு நண்பரே..
அதுவும் அந்த GIF FILE படம் அற்புதம்..
ஒரு வாழ்த்தோடு அது கேன்சரை தருகிறது பாருங்கள்..
புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுககு
ஒரு உதை விட்டால் போல இருக்கிறது..
அதாவது சொல்ல வேண்டிய ஒரு முக்கிய விசயத்தை அந்தப் படம் சொல்லிவிடுகிறது..
ஆம்..
புகைப்பிடிப்பதால் சீக்கிரம் போய் சேரலாம்..
மண்ணில் பாரம் குறையும் என்ற நன்மையும் உண்டு.
முத்தான மூன்று
( வலையுலக நட்பை இணைக்கும் - தொடர் )
என ஒரு பதிவிட்டுள்ளேன் ஓய்விருக்கும்போது வருகை தாருங்களேன்..
நன்றி.
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
கலை படைப்புகள் உருவாக்கலாம் //இது நம்ம ஏரியா ஐ லைக் இட். Follower ஆகி ஓடிவந்து பார்த்தா ஒரே புகை மூட்டம்.//வேண்டாத விருந்தாளியை விரட்ட //அம்மம்மா முடியல .
வாழைபழத்தில் ஊசி செருகுவது போல அழகா தீமைகளை சொல்லியிருக்கீங்க .thanks for sharing.
இமா said...
இருந்திருந்து நான் மாய உலகத்தில் வந்து படிக்கிற முதல் இடுகை இதுவாகவா இருக்க வேணும்! க்ர்ர்ர்ர் இனி இந்தப் பக்கம் வர மாட்டேன். ;))
//நாம் எக்கேடு கெட்டாலும் பிறருக்கு உதவுகிறோமே// !! புகைக்கிறவங்களை விட சுத்தி இருக்கிறவங்களுக்குத் தான் பாதிப்பு அதிகம். ;( அவங்க ஃபில்டரை போட்டுட்டு உள்ள இழுப்பாங்க. நச்சு மீதி எல்லாம் காத்துல விட்டுருவாங்க. ;(
தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...சகோ
டேய் சிகரெட் குடிக்காதடா... சிகரெட் குடிச்சா கேன்சர் வரும்...அப்படின்னு சொன்னா ..... எல்லாம் எங்களுக்கு தெரியும்..பெருசா நல்லது சொல்லவந்துட்டான்...அப்படின்னு சொல்வான்னு வச்சுக்குங்க.... அதயே திருப்பி அவனிடம் இதில் ஒரு அனிமேசன் பாக்ஸ்-ல் வருவதுபோல்....congratulation you have succesfully installed cancer என்று சொல்லி அவனுக்கு கையையும் கொடுத்துப்பாருங்கள்... ஏண்டா எனக்கு கேன்சர் வந்தா உனக்கு அவ்வளவு சந்தோசமா என்று சொல்வதுமட்டுமல்லாமல் அவனுக்குள் பயமும் வரும்....
//நாம் எக்கேடு கெட்டாலும் பிறருக்கு உதவுகிறோமே//
நீ கெடுவதுமட்டுமல்லாமல் மற்றவர்களையும் சேர்த்து அல்லவா பாதிப்புக்குள்ளக்குகிறாய் நீ நல்லாயிரு ( நாசமா போயிறு )என்று மறைமுகமாக சொல்வது தானே .....
திருவிளையாடல் படத்தில் தருமி கேரக்டர்( நாகேஸ்)
சொல்வார் : இந்த உலகத்தில் உன்னைபோல் இருவர் இருந்தால் போதும்..வேண்டாம் நீ ஒருவரே போதும் உலகம் உருப்பட்ரும்
தருமி சொன்ன சூழ்நிலையும், சொன்னவிதமும் போலத்தான் இதுவும்
இருந்தாலும் சகோவின் மனது புண்படும்படியாக இருந்ததால் இது போன்ற பதிவுகளை வராமல் பார்த்துக்கொள்கிறேன்.....
பதிவர்களின் வருகையும் கருத்துக்களும் இல்லையென்றால் பதிவு இடுவதற்கு அர்த்தம் இல்லை... நன்றி
ஹைதர் அலி said...
நிறைய விஷயங்களை தீப்பட்டி போல அடுக்கி இருக்கிறீர்கள்.
நல்ல மனசுல ஏறுகிற மாதிரி பத்த வைத்திருக்கிறீர்கள்.
புகைப் பிடிப்பவர்களுக்கு சாம்பல் பயத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்.
ஆமா
இவ்வளவு பேரு பயன்பெறுகிறார்களா!?
ஹைதர் அலியின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
ஸாதிகா said...
இது பயனான இடுகையா இல்லை அது அல்லாத இடுகையா குழப்பமாக உள்ளது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
நண்பர்களின் கமெண்ட்ஸ்களைப் பார்த்து குழப்பத்தை தீர்த்துக்குங்க..
சிவ.சி.மா. ஜானகிராமன் said...
அருமையான படைப்பு நண்பரே..
அதுவும் அந்த GIF FILE படம் அற்புதம்..
ஒரு வாழ்த்தோடு அது கேன்சரை தருகிறது பாருங்கள்..
புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுககு
ஒரு உதை விட்டால் போல இருக்கிறது..
அதாவது சொல்ல வேண்டிய ஒரு முக்கிய விசயத்தை அந்தப் படம் சொல்லிவிடுகிறது..
ஆம்..
புகைப்பிடிப்பதால் சீக்கிரம் போய் சேரலாம்..
மண்ணில் பாரம் குறையும் என்ற நன்மையும் உண்டு.
முத்தான மூன்று
( வலையுலக நட்பை இணைக்கும் - தொடர் )
என ஒரு பதிவிட்டுள்ளேன் ஓய்விருக்கும்போது வருகை தாருங்களேன்..
நன்றி.
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுககு
ஒரு உதை விட்டால் போல இருக்கிறது..
அழகாக புரிந்துகொண்டீர்கள்...
அந்த முத்தான மூன்றைப்பார்க்க ஆவலுடன் வந்துக்கொண்டிருக்கிறேன்...
angelin said...
கலை படைப்புகள் உருவாக்கலாம் //இது நம்ம ஏரியா ஐ லைக் இட். Follower ஆகி ஓடிவந்து பார்த்தா ஒரே புகை மூட்டம்.//வேண்டாத விருந்தாளியை விரட்ட //அம்மம்மா முடியல .
வாழைபழத்தில் ஊசி செருகுவது போல அழகா தீமைகளை சொல்லியிருக்கீங்க .thanks for sharing...
தாங்களின் வருகைக்கும் புரிதலான பாராட்டுக்கும் மனதார நன்றி
//இருந்தாலும் சகோவின் மனது புண்படும்படியாக இருந்ததால் இது போன்ற பதிவுகளை வராமல் பார்த்துக்கொள்கிறேன்.....// நீங்க வேற.. எதுவும் யோசிக்காம உங்க பாட்டுக்கு போஸ்ட்டிங் போடுங்க. இது டாபிக் அப்பிடி, கர் சொல்லிட்டேன்.
//பதிவர்களின் வருகையும் கருத்துக்களும் இல்லையென்றால் பதிவு இடுவதற்கு அர்த்தம் இல்லை.// புரியுதுல்ல! உங்க பாட்டுக்கு எழுதுறதை எழுதுங்க. ;)
ஆனா.. ஒரேயொரு ஆசை... இந்த போஸ்டிங் போட ஏதாவது குட்..டிக் காரணமாவது தூண்டுதலா இருந்து இருக்கும்ல! அது என்னான்னு தெரிஞ்சுக்கலாமா? முடிஞ்சா சொல்லுங்க.
இமா said...
ஆனா.. ஒரேயொரு ஆசை... இந்த போஸ்டிங் போட ஏதாவது குட்..டிக் காரணமாவது தூண்டுதலா இருந்து இருக்கும்ல! அது என்னான்னு தெரிஞ்சுக்கலாமா? முடிஞ்சா சொல்லுங்க.
காரணம்
angelin மேடம் சொன்னது போல் வாழைபழத்தில் ஊசி செருகுவது போல அழகா தீமைகளை சொல்லமுடியுங்குற காரணம் தான்.... புரிந்திருக்குமென நம்புகிறேன்..
ம்.. ஓகே. தாங்ஸ். ;)
இமா said...
ம்.. ஓகே. தாங்ஸ். ;)
thanks for thanks
Post a Comment