Tuesday, 11 October 2011

ஏங்க இப்படியெல்லாம் பண்றாங்க ? - எச்சரிக்கை அவசியம்...

( இங்கே ஊர் பெயரும், நபர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை )
மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்....


ஒரு பெண் :
நான் பொறந்தது ஏழ்மையான குடும்பத்துல. எனக்கு படிக்கனும்னு ஆசை. ஃப்ளஸ் டூ முடிச்சதும் மேல படிக்கனும்னு சொன்னேன்.

ஆனா, 'காசில்லை, வீட்டுலயே இரு'ன்னு சொல்லிட்டாங்க
அந்த சமயத்துல பேப்பர்ல ஒரு விளம்பரம். 'படிப்பும் தரோம் வேலையும் தரோம்'னு. ஃபிளஸ்டூ படித்த கிராமத்துப் பெண்களுக்கு முன்னுரிமை'னு போட்டிருந்தாங்க.

நான் வீட்டுல சொல்லி, அவங்க கொடுத்திருந்த நம்பருக்கு போன் பண்ணினோம். ரொம்ப தன்மையா பேசினாங்க. 'பார்ட் டைமா வேலை பார்த்துக்கிட்டே நர்சு படிப்பு படிக்கலாம், சம்பளமும் கிடைக்கும்'னு சொன்னாங்க. நானும் அப்பாவும் போனோம். நல்லா பேசுனாங்க.

ஒரு லேடிஸ் ஹாஸ்டல் அட்ரஸ் கொடுத்து ரூம் அங்க இருக்கு
தங்கிங்கன்னு சொன்னாங்க.
' நர்சிங் காலேஜ்ல சேர்க்கிறோம்னு சொன்னாங்க. எங்கப்பாவுக்கு சந்தோசம்.

நல்ல இடத்துல பொண்ணை விட்டிருக்கோம்னு
நிம்மதியா வீட்டுக்கு கிளம்பிப் போனாரு.

ரெண்டாவது நாள் ராத்திரி ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துச்சு.

எனக்கு மயக்க மருந்து கொடுத்து தூங்க வச்சு என் உடைகளை அகற்றி படமெடுத்துட்டாங்க.

அடுத்த நாள் காலையில ஒரு பொண்ணு அந்த படத்தை என்கிட்ட காட்டினா.

நாங்க சொல்ற மாதிரி செய்யலைன்னா இதை வெளில எல்லார்கிட்டேயும் காட்டுவேன்'ன்னு மிரட்டினா.

எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலே. வெளியில சொல்ல முடியல.

பயம், அழுகை அழுகையா வந்தது. மூணு நாள் அழுதேன்.

அந்தப் பொண்ணு என்னை தேத்திற மாதிரி பேசினா. கொஞ்சம் பணம் கொடுத்தா.

 அப்பறம் தான் என்னை வெளியில தொழிலுக்கு அனுப்ப ஆரம்பிச்சாங்க.
எங்க போனாலும் கூட ரெண்டு மூணு பேர் வருவாங்க.


இது யாருக்கும் தெரியாது. வேலைக்குப் போற மாதிரி போயிட்டு வருவோம்.

வீட்டுல நான் வேலைப் பார்த்துக்கிட்டே படிக்கிறேன்னு நினைக்கிறாங்க. என்னை மாதிரி நிறைய பெண்கள் இப்படி ஏமாந்திருக்காங்க.

இப்படி விளம்பரம் கொடுத்து ஏமாத்தறது மட்டுமில்லாம வேற சில வழிகளிலும் அப்பாவிப் பெண்களை ஏமாத்துறாங்க.

ஏழ்மையான பெண்கள் படிக்கும் கல்லூரிப் பக்கம் இருக்கும் டெலிபோன் பூத்களில் இதற்கென ஏஜெண்டுகள் இருப்பார்கள்.

அவர்கள் அங்கு வரும் பெண்களை வசியம் செய்து இந்த வலைக்குள் சிக்க வைத்துவிடுவார்கள்.

ஒரு முறை சிக்கினால் வெளியே வர இயலாது. வாழ்க்கை வீதிக்கு வந்துவிடும். எங்களுடனே பல கல்லூரிப் பெண்கள் பார்ட் டைமாக இந்த தொழிலை செய்துகொண்டிருக்கிறார்கள்.


இந்த தொழிலுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிறது.. அவ்வப்போது வீட்டிற்குச் சென்று ஓரிரு நாள் இருந்துவிட்டு வருவேன்.

அவர்களுக்கு நான் வேலை பார்த்துக்கொண்டே நர்சிங் படிப்பதாக எண்ணம்.

ஆனால் அதைப் பற்றியெல்லாம் அதிகம் விசாரிப்பதில்லை.

நான் கொடுக்கும் பணம் அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது(விரக்தியாய் சிரிக்கிறார்) எனக்கும் இந்த வாழ்க்கை பணம் எல்லாம் பழகிடுச்சு. அடிமையாயிடுச்சு.


இனிமே எனக்கு வாழ்க்கை இல்லை' என்று சொல்லும்போது கண்களில் நீர்துளிகள்.

=====================================================================

அதே போல் டீக்கடைக்கு டீ குடிக்க வந்த பையனிடம் ஒரு நபர் நைசாக பேசி பழகி டீ வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த பையனும் அவருடன் சகஜமாக பழகி டீயை வாங்கி குடித்திருக்கிறான்... -கட்-
அந்த பையன் கண்விழித்து பார்க்கையில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறான்.. உடனே ஏதோ ஒரு ஆயுதம் பின்னால் தாக்கப்பட... மயக்கம் ஆகிவிட்டான்.. மீண்டும் கண்விழித்து பார்க்கையில் ஒரு ரூமில் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறான்.

கத்தியை காட்டி மிரட்டப் பட்டு உணவு ஊட்டப்பட்டிருக்கிறான்.. தினமும் ஒருவர் வந்து இன்சக்சன் போட்டிருக்கிறார்.... தொடர்ந்து 15 நாள் போட்டிருக்கிறார் .. பதினைந்தாவது நாள் நெருங்க பையனின் மார்பகம் வளர ஆரம்பிக்கிறது... கடைசியில் சிறு வலி கூட இல்லாமல் அவனது பிறப்புறுப்பு அறுக்கப்படுகிறது.. ... அவன் திருநங்கையாக மாற்றப்பட்டு பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறான்.....

( இதெல்லாம் நடந்தது மும்பையில்) ஒரு திருவிழா சமயத்தில் அந்த பையன் தப்பித்து மீண்டும் அவனது ஊருக்கு வந்திருக்கிறான்.. அவனுடைய பெற்றவர்களுக்கே அவனை அடையாளம் தெரியவில்லை . நாந்தாம்மா உன் புள்ள அப்படி என்று சொல்லி கதறி அழுதிருக்கிறான்.

தனது பையனை தெருவே நின்று வேடிக்கை பார்க்க...
அவமானம் தாள முடியாமல் குடும்பமே அழுதுதீர்த்தது...
பையன் மனமுடைந்து எல்லாரும் தூங்கிய நேரத்தில் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி இறந்துவிட்டான்...


=====================================================================

தற்பொழுது இணையத்தில் சாட்டிங்கின் மூலம் முகம் தெரியாத பல நபர்கள் பலரோடு பழகிவருகின்றனர்... அந்த பழக்கம் நல்ல விதமாக அமைந்துவிட்டால் பரவாயில்லை இல்லை என்றால் இவர் கதி தான்...

ஒருவர் சாட்டிங்கில் கேர்ள் பிரண்ட் கிடைத்தவுடன் சந்தோசமாக பழகி வந்திருக்கிறார்...உல்லாசமாக இருக்கலாம் வா என அவள் கூப்பிட இவரும் பணத்துடன் சென்றிருக்கிறார்...

சென்ற நேரம் இரவு 7 மணி .வர சொன்ன இடத்திற்கு முன்னதாகவே சென்று நின்றிருக்கிறார்... கார் வந்து நின்று ஒரு பெண் கூப்பிடவும். இவரும் புரிந்துகொண்டு சந்தோசமாக சென்று காரில் ஏறிருக்கிறார்...

கார் விரைந்திருக்கிறது... பிறகு தான் கவனித்திருக்கிறார்..தன்னிடம் பேசியது திருநங்கை என உணர்கிறார்....இவர் காரை நிப்பாட்ட சொல்ல...கார் நிக்காமல் சென்று ஒரு இருட்டான இடத்தில் நிற்கிறது..

அங்கே காத்திருந்த ரவுடிகள் இவரிடம் உள்ள பணம் நகை விலை மதிப்புள்ள செல்போன் என அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அடித்து துரத்திருக்கின்றனர்.....  (காவல் துறையில் புகார் செய்து பிறகு... அவர்களை பிடித்துவிட்டனர் காவல் துறையினர்)

======================================================================
ஒரு நிமிசம்:

இன்று இணையதளத்தில் சாதாரணமாக எந்த வேர்டையாவது போட்டு தேடினால் ஏகப்பட்ட ஆபாச தளங்கள் வருகிறது.. அதுவும் நாம் உன்னதமாக நினைக்கும் உறவுகளின் பெயர்களை கொச்சைப்படுத்தி நிறைய கதைகளும் படங்களும், காணொளிகளும்...வருகிறது..

இன்றைய சூழ்நிலையில் 6 வது , 7 வது படிக்கும் சிறுவர்களுக்கு எளிதாக இணையத்தை கையாள கூடிய திறமை இருக்கிறது.... இப்படி இணையத்தில் இது போன்று உறவுகளை கொச்சைப்படுத்தும் கதைகள் அவர்கள் கண்ணிற்க்கு ப்டும்போது அவர்கள் வாழ்க்கை தடம்புரண்டு கேள்விக்குறியாகி விடாதா... இப்படியே போனால் .. எதிர்கால சந்ததியரின் நிலை என்ன? நினைத்தாலே வேதனையை தருகிறது.

===============================================================

நண்பர்களே இது போன்ற அதிர்ச்சியான சம்பவங்கள் பயமுறுத்த சொல்ல வில்லை..நாம் மிகவும் விழிப்புடன் எச்சரிக்கையாக வாழவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம்......  நீங்களும் இது போன்ற சம்பவங்கள் கேள்விப் பட்டிருந்தால்..கருத்துக்களில் தெரியபடுத்தவும் அன்பர்களே.... விசயம் தெரிந்து ஏனையவர்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.

============================================================
அதுக்காக பயந்துட்டே இருந்தா எப்படி ..வாழ முடியாதுங்க... விழிப்புணர்வோடு இருப்போம்....



அட நம்ம அண்ணே இன்னும் பயம் தெளியாம இருக்காரு... அவரையும் தெளிய வச்சிட்டு போங்க....
========================================================================
உங்கள் பிரியமானவன்,

133 comments:

Unknown said... 1

மாப்ள நீங்க சொல்வதெல்லாம் இப்போ சகஜமாக நடந்து வருவது வேதனையான விஷயமே...இதை தடுக்கனும்னா...விழிப்புணர்வுடன் கூடிய தற்காப்பு அவசியம்...அது ஆணோ பெண்ணோ...தன்னை தானே காப்பாற்றிக்கொள்ள தெரிந்து கொண்டால் தான் இதனை சிறிதளவேனும் தடுக்க முடியும்...இது என் தாழ்மையான கருத்து!..பகிர்வுக்கு நன்றி!

சந்திர வம்சம் said... 2

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTDr4ilXoTwsqG4RMMPI2om2Xny_QfkZyxvpu8Qzlv0SCCzJDKMTQ[/im]


இது போன்ற சூழ்னிலையில் நாம் தான் விழிப்போடு இருக்க வேண்டும்.

MyKitchen Flavors-BonAppetit!. said... 3

Ithai Gautham Menon Pachai Kizhi Muthucahramil Kaati Irukirar.Unwanted desires of ppl can lead them to chained Miseries.Thanks for sharing this info.

மாய உலகம் said... 4

விக்கியுலகம் said...
மாப்ள நீங்க சொல்வதெல்லாம் இப்போ சகஜமாக நடந்து வருவது வேதனையான விஷயமே...இதை தடுக்கனும்னா...விழிப்புணர்வுடன் கூடிய தற்காப்பு அவசியம்...அது ஆணோ பெண்ணோ...தன்னை தானே காப்பாற்றிக்கொள்ள தெரிந்து கொண்டால் தான் இதனை சிறிதளவேனும் தடுக்க முடியும்...இது என் தாழ்மையான கருத்து!..பகிர்வுக்கு நன்றி!//

வாங்க மாம்ஸ்... நீங்கள் சொல்வது போல் தற்காப்புகலை கற்பது அவசியம் சரியாக சொன்னீர்கள்... எனது கருத்தும் அதுவே மாம்ஸ்.... நன்றி.

மாய உலகம் said... 5

இது போன்ற சூழ்னிலையில் நாம் தான் விழிப்போடு இருக்க வேண்டும்.//

வாங்க சந்திரவம்சம்... சரியாக சொன்னீங்க கருத்துக்கு நன்றி

முனைவர் இரா.குணசீலன் said... 6

சமூக அவலங்களை அழகாகப் படம்பிடித்துக்காட்டியிருக்கிறீர்கள் நண்பா..

நாம் தான் கவனமாக இருக்கவேண்டும்...

Anonymous said... 7

இது தான் பதிவு. பதிவு சூப்பர் தலைவா.

மாய உலகம் said... 8

MyKitchen Flavors-BonAppetit!. said...
Ithai Gautham Menon Pachai Kizhi Muthucahramil Kaati Irukirar.Unwanted desires of ppl can lead them to chained Miseries.Thanks for sharing this info.//

வாங்க மேம்... ஓ நான் நினைச்சுட்டே இருந்தேங்க பச்சைக்கிளி முத்துச்சரத்திலிருந்து ஒரு ஸ்டில்ல போடுனம்னு... ஞாபகபடுத்தியமைக்கு மிக்க நன்றி... கருத்துக்கும் நன்றி.

மாய உலகம் said... 9

முனைவர்.இரா.குணசீலன் said...
சமூக அவலங்களை அழகாகப் படம்பிடித்துக்காட்டியிருக்கிறீர்கள் நண்பா..

நாம் தான் கவனமாக இருக்கவேண்டும்...//

வாங்க நண்பரே! சரியாக சொன்னீர்கள்.. கருத்துக்கு நன்றி

மாய உலகம் said... 10

ஆரூர் முனா செந்திலு said...
இது தான் பதிவு. பதிவு சூப்பர் தலைவா.//

வாங்க நண்பரே! கருத்துக்கு மிக்க நன்றி

ஸாதிகா said... 11

நல்ல விழிப்புணர்வு மிக்க பதிவு.

ஸாதிகா said... 12

வடிவேலு புலம்பல் ஹைலைட்.சூப்பர்

செங்கோவி said... 13

நல்ல விழிப்புணர்வுப் பதிவு மாயா...இணையத்தில் அறியாதோருடன் சாட்டை தவிர்ப்பது இன்னும் நல்லது..

kannanvaruvan said... 14

antha paiyanin kathai puthiyathaka irukkirathu...aan enna pen enna kayavarkalin kaiyil sikkinaal irandu perukkume aapaththuthanaa..oh..God

Admin said... 15

இணையம் தீமைகளின் கதவை திறந்தே வைத்திருக்கிறது. பிள்ளைகளின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். எச்சரிக்கை பதிவிற்கு நன்றி நண்பா!

ஸாதிகா said... 16

[im]LIL urlhttp://4.bp.blogspot.com/_tgM9xSZdl34/TQN7Fg1wEWI/AAAAAAAAGKk/_J2FFfLgQtQ/s1600/computer%2Bvirus.jpg[/ma]

வெளங்காதவன்™ said... 17

:)

மாய உலகம் said... 18

ஸாதிகா said... 11
நல்ல விழிப்புணர்வு மிக்க பதிவு.

வடிவேலு புலம்பல் ஹைலைட்.சூப்பர்//

வாங்க மேம்... சூப்பரான கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said... 19

செங்கோவி said... 13
நல்ல விழிப்புணர்வுப் பதிவு மாயா...இணையத்தில் அறியாதோருடன் சாட்டை தவிர்ப்பது இன்னும் நல்லது..//

வாங்க நண்பா... உண்மை தான் அறியாதோருடன் தொடர்புகொள்ளுதல் அதிகபட்சம் தீங்குவிளைவிக்கவே வாய்ப்பிருக்கு... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said... 20

kannanvaruvan said... 14
antha paiyanin kathai puthiyathaka irukkirathu...aan enna pen enna kayavarkalin kaiyil sikkinaal irandu perukkume aapaththuthanaa..oh..God//

வாங்க... முற்றிலும் உண்மை இன்று தீயவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றனர்... அவர்களிடம் மிகுந்த விளிப்புணர்வுடன் இருபாலரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

SURYAJEEVA said... 21

அருமை... விழிப்புணர்வு தேவை... என் இனைய தள கடையில் k9filter பாமிலி பில்ட்டர் போட்டு வைத்திருக்கிறேன்.. இலவச மென்பொருள் தான்... ஒரு சிறுவன் பதினைந்து வயதிருக்கும், அண்ணே எந்த வலை தளமும் திறக்க மாட்டேங்குது என்றான்... சென்று பார்த்தால் சிறுவன் அந்த வலை தளங்களை தேடி கொண்டிருக்கிறான்... வேணாம்டா என்று கூறி அனுப்பி விட்டேன்... அநேகமாய் அவன் இப்ப வேறு கடைகளில் பார்த்து கொண்டிருப்பான்...

மாய உலகம் said... 22

Abdul Basith said... 15
இணையம் தீமைகளின் கதவை திறந்தே வைத்திருக்கிறது. பிள்ளைகளின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். எச்சரிக்கை பதிவிற்கு நன்றி நண்பா!//

வாங்க நண்பா... பிள்ளைகளின் நடவடிக்கையை உற்றுகவனிக்க வேண்டும் இல்லை என்றால் பிள்ளைகளின் எதிர்காலம் பாழா போகவாய்ப்பிருக்கு... கருத்துக்கு மிக்க நன்றி நண்பா

மாய உலகம் said... 23

வெளங்காதவன் said... 17
:)//

வாங்க சகோ! நன்றி

மாய உலகம் said... 24

suryajeeva said... 21
அருமை... விழிப்புணர்வு தேவை... என் இனைய தள கடையில் k9filter பாமிலி பில்ட்டர் போட்டு வைத்திருக்கிறேன்.. இலவச மென்பொருள் தான்... ஒரு சிறுவன் பதினைந்து வயதிருக்கும், அண்ணே எந்த வலை தளமும் திறக்க மாட்டேங்குது என்றான்... சென்று பார்த்தால் சிறுவன் அந்த வலை தளங்களை தேடி கொண்டிருக்கிறான்... வேணாம்டா என்று கூறி அனுப்பி விட்டேன்... அநேகமாய் அவன் இப்ப வேறு கடைகளில் பார்த்து கொண்டிருப்பான்...//

ஹா ஹா... சிறுவயதிலயே பழுத்துவிட்டான் போலருக்கு... அவன் அப்படியாக காரணம் கட்டுப்பாடற்ற சமூகம் தானே... கருத்துக்கு மிக்க நன்றி சகோ

Unknown said... 25

தற்கால இளைய சமுதாயம் அறிய வேண்டிய நல்ல
பதிவு சகோ!

புலவர் சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி said... 26

மிகவும் விழிப்புடன் எச்சரிக்கையாக வாழவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம்...../

பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

குறையொன்றுமில்லை. said... 27

சமூக அவலங்களை சொல்லி இருக்கீங்க ஜனங்கள் விழிப்புணர்வுடன் இருக்கனும்.

மாய உலகம் said... 28

ஸாதிகா said...
[im]http://4.bp.blogspot.com/_tgM9xSZdl34/TQN7Fg1wEWI/AAAAAAAAGKk/_J2FFfLgQtQ/s1600/computer%2Bvirus.jpg[/im]


நன்றி...

மாய உலகம் said... 29

புலவர் சா இராமாநுசம் said...
தற்கால இளைய சமுதாயம் அறிய வேண்டிய நல்ல
பதிவு சகோ!

புலவர் சா இராமாநுசம்//

வாங்க அன்பு சகோதரரே... கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said... 30

இராஜராஜேஸ்வரி said...
மிகவும் விழிப்புடன் எச்சரிக்கையாக வாழவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம்...../

பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

வாங்க மேடம்! கருத்துக்கும் பாராட்டுக்கும் மனம்கனிந்த நன்றி.

மாய உலகம் said... 31

Lakshmi said...
சமூக அவலங்களை சொல்லி இருக்கீங்க ஜனங்கள் விழிப்புணர்வுடன் இருக்கனும்.//

வாங்கம்மா.. கருத்துக்கு மிக்க நன்றி.

நிரூபன் said... 32

இனிய காலை வணக்கம் பாஸ்,

காலத்தின் கோலத்தினால், தொழில் நுட்ப விருத்தியினாலும் ஒரு சில ஈனப் பிறவிகளின் செயல்களினாலும் திசை மாறும் இளசுகளின் வாழ்க்கை முறையினை சம்பவ விளக்கங்களோடு சொல்லியிருக்கிறீங்க.

நாம் கண் அயரும் வேளை பார்த்து கதையினை முடிக்கும் இந் நபர்களை எப்படி நாம் இனங்கண்டு கொள்வதென்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

நல்லதோர் எச்சரிக்கை, அறிவுறுத்தற் பதிவு பாஸ்.

Mathuran said... 33

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு நண்பா...
எல்லோரும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். இப்படியான கயவர்கள் பிடிபட்டால் கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்

மாய உலகம் said... 34

நிரூபன் said...
இனிய காலை வணக்கம் பாஸ்,

காலத்தின் கோலத்தினால், தொழில் நுட்ப விருத்தியினாலும் ஒரு சில ஈனப் பிறவிகளின் செயல்களினாலும் திசை மாறும் இளசுகளின் வாழ்க்கை முறையினை சம்பவ விளக்கங்களோடு சொல்லியிருக்கிறீங்க.

நாம் கண் அயரும் வேளை பார்த்து கதையினை முடிக்கும் இந் நபர்களை எப்படி நாம் இனங்கண்டு கொள்வதென்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

நல்லதோர் எச்சரிக்கை, அறிவுறுத்தற் பதிவு பாஸ்.//

வாங்க நண்பா... உண்மை தான் நண்பா... கண் அயரும் வேளையிலே அவர்களது வேலையை காட்டிவிடுகிறார்கள்.. கருத்துக்கு நன்றி நண்பா...

மாய உலகம் said... 35

மதுரன் said...
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு நண்பா...
எல்லோரும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். இப்படியான கயவர்கள் பிடிபட்டால் கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்//

வாங்க நண்பா... அரசாங்கத்திடம் தப்பினாலும் கண்டிப்பாக அவர்களுக்கு இறைவன் மூலம் தண்டனை உண்டு... கருத்துக்கு நன்றி நண்பா.

இந்திரா said... 36

ஏற்கனவே இது போன்ற தகவல்கள் தெரிந்திருப்பினும் மேலும் எச்சரிக்கை செய்கிறது உங்கள் பதிவு. நன்றி.

தனித்தனி பதிவாக போட்டிருக்கலாமே???

சத்ரியன் said... 37

பயமும் ஒரு பலம்தான்.

பயனுள்ள பதிவுங்க ராஜேஷ்.

தனிமரம் said... 38

சமுகத்தில் இப்படியும் சிலர் இருந்து செய்யும் செயலினால் பலர் பாதிப்படைவது நிஜமே!

கோகுல் said... 39

ராஜேஷ்!வறுமையும் அறியாமையும் இயலாமையும் முதல் நீங்க சொன்ன விசயங்களுக்கு காரணமாயிருக்கு.
சிறுவர்கள் இணையத்தை கையாளும் போது நண்பர் சூர்யா ஜீவா சொன்னது போல family filter போடுவது நல்லது!
அருமையான பதிவு ராஜேஷ்! தொடருங்க!

சென்னை பித்தன் said... 40

விழிப்புணர்ப்பதிவு.நன்றி
த.ம.11

Unknown said... 41

நல்ல சமூக விழிப்புணர்வு பதிவு

Unknown said... 42

என்ன கொடுமைடா இது??

செங்கோவி said... 43

என் ஆஃபீஸில் பதிவின் கீழே இருக்கும் பின்னூட்டப் பெட்டி, மெயில் ஐடியை ஏற்றுக்கொள்வதில்லை..அனானி மட்டுமே ஏற்றுக்கொள்கிறது..எனவே பாப் அப்-ம் வைக்க ட்ரை பண்ணுங்கள்..


http://ethirneechal.blogspot.com/2010/09/comment-form.html

K.s.s.Rajh said... 44

மிகவும் வேதனையான சம்பவங்கள்


உங்கள் பதிவு ஒரு விழிப்புணர்வு பதிவாக அமையவேண்டும்

நாய் நக்ஸ் said... 45

Good post....
Comment box thaniyaga
vaikkavum....
Mob..-ku siramamaga
irukku

RAMA RAVI (RAMVI) said... 46

படிக்கவே கஷ்டமாக இருக்கு அந்த பெண்களின் நிலைமை.
நல்ல விழிப்புணர்வு பதிவு ராஜேஷ்.

athira said... 47

முடியல்லியே மாயா இப்போ அவ்வ்வ்வ்வ்வ்:(((, பிறகு வந்து படிச்சூஉபின்னூட்டம் போடுறேன், சரி சரி பிந்தி வந்ததுக்காக ஒரு பார்சல் வெஜ் பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராணி பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ... ஹொட்டா வச்சிருங்க குளிர விட்டிடாதீங்க ஓக்கை:))))

[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRuEBn0dreYuj3fM7Iy0VAAQztMAsNHuiSJ9xFcB303mZck9eRS[/im]

மகேந்திரன் said... 48

அன்புநிறை நண்பரே...
கடந்த ஒருவாரம் கொஞ்சம் வேலைப்பளு காரணமாக வரமுடியவில்லை..
பொறுத்தருள்க...

மகேந்திரன் said... 49

வந்து படித்ததும் அத்தனையும் அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள்.
ஆனாலும் விழிப்புணர்வுடன் இருக்கச் சொல்லும் பதிவு.

மகேந்திரன் said... 50

இந்த உலகத்தில் அறிப்பெடுத்தவங்க இருக்கும் வரை
எதுவும் நடக்கும்..
நாம தான் பார்த்து பக்குவமா நடந்துக்கணும்...
பதிவுக்கு நன்றி நண்பரே...

Radha rani said... 51

சமூக விழிப்புணர்வு மிக மிக அவசியம்.அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு.பகிர்வுக்கு நன்றி.

Radha rani said... 52

copy, paste பண்றதுகுள்ள அப்பாடா ..... சரி பண்ணுங்க ..

அம்பாளடியாள் said... 53

மிகுந்த துயர்தரும் பகிர்வு .இப்பெல்லாம் வாழ்க்கைய நினைத்துப்
பார்க்கவே பயமாய் உள்ளது சகோ .அநீதி முற்றிவிட்டது .நன்றி
நல்லதொரு விழிப்புணர்வுப் பகிர்வுக்கு ..........

காட்டான் said... 54

வணக்கம் மாப்பிள அருமையான ஒரு விளிப்புணர்வு பதிவு இப்பதிவு அதிகமானவர்களை சென்றடையவேண்டும் வாழ்த்துக்கள்..

சக்தி கல்வி மையம் said... 55

விழிப்புணர்வு பதிவு..
பகிர்வுக்கு நன்றி..

test said... 56

நீங்க சொல்றது எல்லாமே உண்மைதான்! எச்சரிக்கையுடன் இருப்போம்!

N.H. Narasimma Prasad said... 57

இன்றைய நவீன உலகில் நடக்கும் பரவலான குற்றங்களை சுட்டிக் காட்டியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.

கூடல் பாலா said... 58

நல்ல எச்சரிக்கை ...

vanathy said... 59

very scary to read. thanks for sharing.

ராஜா MVS said... 60

எல்லாத்தையும் சீக்கிரமாக தெரிந்துகொள்ளும் வேட்கை பெறுகிவருவகிறது.. இதில் தவறில்லை ஆனால் தடம் புரண்டுவிட அதிக வாய்ப்புள்ளது...

நல்ல விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி...நண்பா...

கடம்பவன குயில் said... 61

இணையத்தில் எச்சரிக்கை அவசியம். 5ம் வகுப்பிலேயே இணையத்தை பள்ளி வேலைகளுக்காக பயன்படுத்ததொடங்கிவிடுகிறார்கள் இன்றைய சிறார்கள். பெற்றோர்கள் நேரடி கண்காணிப்பு அவசியம்.

நல்ல விழிப்புணர்வு பதிவு. நன்றி சகோ.

ஆயிஷா said... 62

விழிப்புணர்வு பதிவு .பகிர்வுக்கு நன்றி சகோ

Unknown said... 63

அறியாமையும், அதேசமயத்தில் அறிவில் வளர்ந்தவர்கள் அளவுக்கு மீறி ஆசைப் படுவதும் என பல்வேறு காரணிகள் தொடர்ந்து ஒவ்வொருவரையும் திசை மாற்றிக் கொண்டிருக்கிறது. நல்ல விழிப்பயுனர்வுக் கட்டுரை.

தமிழ்வாசி பிரகாஷ் said... 64

ஒவ்வொரு விஷயமும் எப்படி பிளான் பண்ணி செய்றாங்க. மக்கள் ரொம்பவே விழிப்புடன் இருக்க வேண்டும்...

athira said... 65

ஹா.ஹா...ஹா.. வந்திட்டமில்ல..

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSpyFVmXkEViVYA1xw1a7bMCd2p080BmzkxaxQm_5Fid9ap97ituw[/im]

athira said... 66

இப்போதான் முழுவதும் படித்தேன் மாயா. மனதை நெருடுகிறது. இப்படி எவ்வளவோ வெளி உலகுக்குக் தெரியாமல் நடப்பதாகத்தான் அறிகிறோம்.

இப்படிப் பதிவுகள் மூலம் வெளி உலகுக்குத் தெரியப்படுத்துவது நல்லதே.

ஆனால் வசதியுள்ள பெண்கள் இப்படி மாட்டுப்படுவது குறைவுதானே. ஆனா வசதி குறைந்தவர்களுக்கு இதையெல்லாம் படித்து அறிய நெட் வசதி இருக்காதே:(((.

athira said... 67

எதுக்கு வடிவேல் அங்கிளுக்கு உப்படி உதறலெடுக்குது?:))) என்னவோ பண்ணிட்டாரோ?:)))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

Anonymous said... 68

நல்ல விழிப்புணர்வு மிக்க பதிவு...

மாய உலகம் said... 69

இந்திரா said...
ஏற்கனவே இது போன்ற தகவல்கள் தெரிந்திருப்பினும் மேலும் எச்சரிக்கை செய்கிறது உங்கள் பதிவு. நன்றி.

தனித்தனி பதிவாக போட்டிருக்கலாமே???//

வாங்க மேம்... கருத்துக்கு மிக்க நன்றி... நானும் தனித்தனி பதிவாக போடலாமென்று தான் நினைத்திருந்தேன்... நண்பர்களுக்கு என்னடா இவன் பயமுறுத்துற பதிவாகவே போடறானேன்னு தோன்றிடுமோன்னு பயந்து ஒரே டைம்ல படிச்சுடட்டும்னு போட்டுட்டேன்.. நன்றி

மாய உலகம் said... 70

சத்ரியன் said...
பயமும் ஒரு பலம்தான்.

பயனுள்ள பதிவுங்க ராஜேஷ்.//

பயப்பட வேண்டிய விசயத்திற்கு பயப்பட்டே ஆகவேண்டும்... அதுதான் பலம் சரியாக சொன்னீர்கள் நண்பா.. நன்றி.

மாய உலகம் said... 71

தனிமரம் said...
சமுகத்தில் இப்படியும் சிலர் இருந்து செய்யும் செயலினால் பலர் பாதிப்படைவது நிஜமே!//

வாங்க தனிமரம்... கருத்துக்கு மிக்க நன்றி.

athira said... 72
This comment has been removed by the author.
athira said... 73

இண்டைக்குப் பின்னூடங்களுக்குப் பதில் போட்டு முடியவே மாயாவுக்கு விடிஞ்சிடும்ம்ம்ம் ஹா..ஹா..ஹா...:)))

[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTkUoeqHTuc53vpF2pS3_n0o9EA12J0_Uji2_qnusSnO5PzZbCJ[/im]

படம் வருகுதில்லையே மாயா...

மாய உலகம் said... 74

கோகுல் said...
ராஜேஷ்!வறுமையும் அறியாமையும் இயலாமையும் முதல் நீங்க சொன்ன விசயங்களுக்கு காரணமாயிருக்கு.
சிறுவர்கள் இணையத்தை கையாளும் போது நண்பர் சூர்யா ஜீவா சொன்னது போல family filter போடுவது நல்லது!
அருமையான பதிவு ராஜேஷ்! தொடருங்க!//

வாங்க கோகுல்... தங்களது விரிவான கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said... 75

சென்னை பித்தன் said...
விழிப்புணர்ப்பதிவு.நன்றி
த.ம.11//

வாங்க... கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said... 76

வைரை சதிஷ் said...
நல்ல சமூக விழிப்புணர்வு பதிவு

வாங்க சகோ கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said... 77

மைந்தன் சிவா said...
என்ன கொடுமைடா இது??

வாங்க நண்பா கருத்துக்கு நன்றி

மாய உலகம் said... 78

செங்கோவி said...
என் ஆஃபீஸில் பதிவின் கீழே இருக்கும் பின்னூட்டப் பெட்டி, மெயில் ஐடியை ஏற்றுக்கொள்வதில்லை..அனானி மட்டுமே ஏற்றுக்கொள்கிறது..எனவே பாப் அப்-ம் வைக்க ட்ரை பண்ணுங்கள்..


ஆல்ரெடி பாப் அப் தான் வைத்திருந்தேன் நண்பா.. கலர் பிண்ணூட்ட பெட்டிக்கு ஆசைப்பட்டு மாற்றியிருந்தேன்.. இதோ இப்போதே பாப் அப்புக்கு மாற்றிவிடுகிறேன்.. நன்றி

மாய உலகம் said... 79

K.s.s.Rajh said...
மிகவும் வேதனையான சம்பவங்கள்

உங்கள் பதிவு ஒரு விழிப்புணர்வு பதிவாக அமையவேண்டும்//

வாங்க நண்பா! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said... 80

NAAI-NAKKS said...
Good post....
Comment box thaniyaga
vaikkavum....
Mob..-ku siramamaga
irukku//

வாங்க நண்பா.. பாப் அப்புக்கு மாற்றிவிட்டேன் நண்பா... நன்றி.

மாய உலகம் said... 81

RAMVI said...
படிக்கவே கஷ்டமாக இருக்கு அந்த பெண்களின் நிலைமை.
நல்ல விழிப்புணர்வு பதிவு ராஜேஷ்.//

வாங்க.. கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said... 82

athira said...
முடியல்லியே மாயா இப்போ அவ்வ்வ்வ்வ்வ்:(((, பிறகு வந்து படிச்சூஉபின்னூட்டம் போடுறேன், சரி சரி பிந்தி வந்ததுக்காக ஒரு பார்சல் வெஜ் பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராணி பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ... ஹொட்டா வச்சிருங்க குளிர விட்டிடாதீங்க ஓக்கை:))))//

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSm-N4Fc22oNDechgu4Pie0Rl6FQgzpG0sTSFW1fBbtFF9iySeS[/im]

எல்லா பிரியாணியும் இருக்கு உல்லான் பிரியாணி மட்டும் கேக்காதீங்கோ... கடல்லயை இல்லையாம்... அவ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said... 83

மகேந்திரன் said...
அன்புநிறை நண்பரே...
கடந்த ஒருவாரம் கொஞ்சம் வேலைப்பளு காரணமாக வரமுடியவில்லை..
பொறுத்தருள்க...//

வாங்க நண்பா... ஓய்வு நேரம் கிடைக்கும்போது மறவாமல் வந்துவிடுங்கள் நண்பா..

athira said... 84

ஹா..ஹா..ஹா... மாயா ரொம்ப ரயேட்டா இருப்பீங்க:)) இந்தாங்க கோக்... குடிச்சிட்டுத் தென்ப மிச்சப் பின்னூட்டம் போடுங்க:))

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQnMUuQ97XiatbguoWv0nlFtfbbQK7UwAcODVWbREvqkclkjckryw[/im]

மாய உலகம் said... 85

மகேந்திரன் said...
வந்து படித்ததும் அத்தனையும் அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள்.
ஆனாலும் விழிப்புணர்வுடன் இருக்கச் சொல்லும் பதிவு.//

மகேந்திரன் said...
இந்த உலகத்தில் அறிப்பெடுத்தவங்க இருக்கும் வரை
எதுவும் நடக்கும்..
நாம தான் பார்த்து பக்குவமா நடந்துக்கணும்...
பதிவுக்கு நன்றி நண்பரே..//

ஆம் நண்பா... அட்டூழியங்கள் செய்யும் நபர்கள் பெருகிவிட்டார்கள்.நாம் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் கருத்துக்கு மனம்கனிந்த நன்றி நண்பா

மாய உலகம் said... 86

ராதா ராணி said...
சமூக விழிப்புணர்வு மிக மிக அவசியம்.அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு.பகிர்வுக்கு நன்றி.//

வாங்க ..கருத்துக்கு மிக்க நன்றி...

athira said... 87

இண்டைக்குப் படமேதும் வருகுதில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), செக் பண்ணி ஒரு படம் போடுங்க மாயா.

மாய உலகம் said... 88

ராதா ராணி said...
copy, paste பண்றதுகுள்ள அப்பாடா ..... சரி பண்ணுங்க ..//

ஹா ஹா இதுல காப்பி பேஸ்ட் பண்ணமுடியாதே

மாய உலகம் said... 89

அம்பாளடியாள் said...
மிகுந்த துயர்தரும் பகிர்வு .இப்பெல்லாம் வாழ்க்கைய நினைத்துப்
பார்க்கவே பயமாய் உள்ளது சகோ .அநீதி முற்றிவிட்டது .நன்றி
நல்லதொரு விழிப்புணர்வுப் பகிர்வுக்கு ..........//

வாங்க சகோ! கருத்துக்கு நன்றி

vetha (kovaikkavi) said... 90

அம்மம்மா! படு பயங்கரமாயிருக்கே! என்னென்னவெல்லாம் நடக்கிறது.குறிப்பாக இளைய பெண்கள் பிள்ளைகள் விழிப்பாக இருக்கட்டும். நன்றி மாயஉலகம்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

மாய உலகம் said... 91

athira said...
இண்டைக்குப் படமேதும் வருகுதில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), செக் பண்ணி ஒரு படம் போடுங்க மாயா.//

மாய உலகம் பாப் அப் கமேண்டில் தெரியாது மியாவ்... பதிவில் பாருங்கள் வந்திருக்கும்....

மாய உலகம் said... 92

காட்டான் said...
வணக்கம் மாப்பிள அருமையான ஒரு விளிப்புணர்வு பதிவு இப்பதிவு அதிகமானவர்களை சென்றடையவேண்டும் வாழ்த்துக்கள்..//

வாங்க மாம்ஸ்... கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said... 93

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
விழிப்புணர்வு பதிவு..
பகிர்வுக்கு நன்றி..//

வாங்க சார் கருத்துக்கு நன்றி

athira said... 94

ஐ படம் வருது... படம் வருது...

[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ62orM3jviBIlRywJm-NtiDtaiY7DeGkt-qLOdK02_CguUACz4sA[/im]

அ.கோ.முட்டையைப் போட்டுக்காட்டி என் ஆவலைத் தூண்டிட்டீங்க அவ்வ்வ்வ்வ்வ்:)) இந்த மாதம் நாங்க சைவம்:(((.

மாய உலகம் said... 95

ஜீ... said...
நீங்க சொல்றது எல்லாமே உண்மைதான்! எச்சரிக்கையுடன் இருப்போம்!//

வாங்க ஜீ... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said... 96

N.H.பிரசாத் said...
இன்றைய நவீன உலகில் நடக்கும் பரவலான குற்றங்களை சுட்டிக் காட்டியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.//

வாங்க நண்பா! கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said... 97

koodal bala said...
நல்ல எச்சரிக்கை ...//

வாங்க நண்பா!கருத்துக்கு நன்றி

மாய உலகம் said... 98

vanathy said...
very scary to read. thanks for sharing.//

thank you

மாய உலகம் said... 99

ராஜா MVS said...
எல்லாத்தையும் சீக்கிரமாக தெரிந்துகொள்ளும் வேட்கை பெறுகிவருவகிறது.. இதில் தவறில்லை ஆனால் தடம் புரண்டுவிட அதிக வாய்ப்புள்ளது...

நல்ல விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி...நண்பா..//

வாங்க நண்பா!கருத்துக்கு மனம்கனிந்த நன்றி.

மாய உலகம் said... 100

athira said...
ஐ படம் வருது... படம் வருது...

அ.கோ.முட்டையைப் போட்டுக்காட்டி என் ஆவலைத் தூண்டிட்டீங்க அவ்வ்வ்வ்வ்வ்:)) இந்த மாதம் நாங்க சைவம்:(((.//

அவ்வ்வ்வ்வ்... சேம் பிளட்ட்டூஊஊ

மாய உலகம் said... 101

கடம்பவன குயில் said...
இணையத்தில் எச்சரிக்கை அவசியம். 5ம் வகுப்பிலேயே இணையத்தை பள்ளி வேலைகளுக்காக பயன்படுத்ததொடங்கிவிடுகிறார்கள் இன்றைய சிறார்கள். பெற்றோர்கள் நேரடி கண்காணிப்பு அவசியம்.

நல்ல விழிப்புணர்வு பதிவு. நன்றி சகோ.//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said... 102

ஆயிஷா அபுல் said...
விழிப்புணர்வு பதிவு .பகிர்வுக்கு நன்றி சகோ//

வாங்க சகோ! கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said... 103

அப்பு said...
அறியாமையும், அதேசமயத்தில் அறிவில் வளர்ந்தவர்கள் அளவுக்கு மீறி ஆசைப் படுவதும் என பல்வேறு காரணிகள் தொடர்ந்து ஒவ்வொருவரையும் திசை மாற்றிக் கொண்டிருக்கிறது. நல்ல விழிப்பயுனர்வுக் கட்டுரை.//

வாங்க சகோ! கருத்துக்கு நன்றி

athira said... 104

ஹா..ஹா..ஹா... இன்னும் பின்னூட்டங்களுக்குப் பதில் போட்டு முடியேல்லை... ஹோம் வேர்க்கில மாயா ஸ்ஸ்ஸ்ஸ்லோஓஓஓ:)))... நாம போய் யோகாவைச் செய்வோம்... :)))


[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSrA_rBjTZbpasv-9xcHAm7k_JLekMrMONhSepRgnSRV1JBX4Yv[/im]

மாய உலகம் said... 105

தமிழ்வாசி - Prakash said...
ஒவ்வொரு விஷயமும் எப்படி பிளான் பண்ணி செய்றாங்க. மக்கள் ரொம்பவே விழிப்புடன் இருக்க வேண்டும்...//

வாங்க நண்பா! கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said... 106

athira said...
ஹா.ஹா...ஹா.. வந்திட்டமில்ல..//

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcR7ZSMKF4KJCoYJhWkcBAzajApVwuMfU3dHlLAoniVN8YIJMbVw1wmTGyr1cw[/im]
வாங்க வாங்க

மாய உலகம் said... 107

athira said...
இப்போதான் முழுவதும் படித்தேன் மாயா. மனதை நெருடுகிறது. இப்படி எவ்வளவோ வெளி உலகுக்குக் தெரியாமல் நடப்பதாகத்தான் அறிகிறோம்.

இப்படிப் பதிவுகள் மூலம் வெளி உலகுக்குத் தெரியப்படுத்துவது நல்லதே.

ஆனால் வசதியுள்ள பெண்கள் இப்படி மாட்டுப்படுவது குறைவுதானே. ஆனா வசதி குறைந்தவர்களுக்கு இதையெல்லாம் படித்து அறிய நெட் வசதி இருக்காதே:(((.//

இது ஒரு உதாரணம் தான்... இது போன்ற ஏகப்பட்ட அட்டூழியங்கள் நாட்டில் நடந்துகொண்டு தானிருக்கின்றன... ஒவ்வொரு விசயத்திலும் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.... அப்படியில்லை பச்சைக்கிளி முத்துச்சரம் பார்த்தால் புரியும்... யார் வேண்டுமானாலும் மாட்டப்படலாம்.. மிகுந்த எச்சரிக்கை தேவை வாழ்வுதனிலே..

மாய உலகம் said... 108

athira said...
எதுக்கு வடிவேல் அங்கிளுக்கு உப்படி உதறலெடுக்குது?:))) என்னவோ பண்ணிட்டாரோ?:)))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).//

ஹா ஹா

மாய உலகம் said... 109

ரெவெரி said...
நல்ல விழிப்புணர்வு மிக்க பதிவு...//

வாங்க நண்பா... நன்றி.

மாய உலகம் said... 110

athira said...
இண்டைக்குப் பின்னூடங்களுக்குப் பதில் போட்டு முடியவே மாயாவுக்கு விடிஞ்சிடும்ம்ம்ம் ஹா..ஹா..ஹா...:)))//

[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTGaal4WVjinBWltTTikcXlQRCP61naZxAKuhodBmxpm-Z6aRA_[/im]

இதோ வேகவேகமாக போட்டுட்ருக்கேன்... ஹி ஹி

மாய உலகம் said... 111

athira said...
ஹா..ஹா..ஹா... மாயா ரொம்ப ரயேட்டா இருப்பீங்க:)) இந்தாங்க கோக்... குடிச்சிட்டுத் தென்ப மிச்சப் பின்னூட்டம் போடுங்க:))//

[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRCCNVS6xdAoFOl1F9srg9E4LacUM2Td3AazQMi-dkr6HRDYWkK[/im]

அப்பாடா தெம்பு வந்துருச்ச்சேஏஏஏஏஏ

மாய உலகம் said... 112

kavithai (kovaikkavi) said...
அம்மம்மா! படு பயங்கரமாயிருக்கே! என்னென்னவெல்லாம் நடக்கிறது.குறிப்பாக இளைய பெண்கள் பிள்ளைகள் விழிப்பாக இருக்கட்டும். நன்றி மாயஉலகம்.//

வாங்க கோவைகவி... கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said... 113

athira said...
ஹா..ஹா..ஹா... இன்னும் பின்னூட்டங்களுக்குப் பதில் போட்டு முடியேல்லை... ஹோம் வேர்க்கில மாயா ஸ்ஸ்ஸ்ஸ்லோஓஓஓ:)))... நாம போய் யோகாவைச் செய்வோம்... :)))//

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQfL80j-E8b3juuQliIbzrHuU0WmiHkRH3nnxvURI73NOowGezXrw[/im]
ஆஹா அதுக்குள்ள எஸ்ஸா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-))))))

M.R said... 114
This comment has been removed by the author.
M.R said... 115

நல்லதோர் விழிப்புணர்வு பதிவு

மற்றவர் அறிய தந்திட்ட தங்களுக்கு நன்றி

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) said... 116

haaaa..haa..haa... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லும்போது 4 பல்லுத்தான் தெரியுதே? யூத் எண்டெல்லோ சொன்னார்கள்.. பல்லெல்லாம் கொட்டிடுச்சே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))

[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRXkutvbFLy55HFnQlqUKgjHV_1IO4hSgTqpjEreV4hgUNjhH-7[/im]

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said... 117

ஸலாம் சகோ.மாயுலகம்,
இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை கேள்விப்பட்டு இருந்தாலும், மீண்டும் மீண்டும் நியாபகப்படுத்திக்கொள்வது விழிப்புணர்வோடு இருக்க உதவும். இதுபோன்ற குற்றவாளிகளுக்கு தயவு தாட்சண்யமின்றி உச்சபட்ச தண்டனைகள் தரப்படல் வேண்டும். சமூக ஒழுக்கம் சாகாமல் காக்கப்படல் வேண்டும். பகிர்வுக்கு நன்றி சகோ.

ஆமினா said... 118

விழிப்புணர்வூட்டும் பதிவு சகோ.

அடிக்கடி இப்படி பட்ட எச்சரிக்கை பதிவுகள் போடுவது பலரை உஷார் படுத்தி தீய வழியில் இருந்து தடுக்க உதவும்.

வாழ்த்துக்கள்

மாய உலகம் said... 119

M.R said...
நல்லதோர் விழிப்புணர்வு பதிவு

மற்றவர் அறிய தந்திட்ட தங்களுக்கு நன்றி//

வாங்க தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said... 120

athira said...
haaaa..haa..haa... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லும்போது 4 பல்லுத்தான் தெரியுதே? யூத் எண்டெல்லோ சொன்னார்கள்.. பல்லெல்லாம் கொட்டிடுச்சே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))//

இந்த அவமானம் உனக்கு தேவையா?.. தேம்ஸ்ல குதிச்சர்றா ராஜேஷேஏஏஏஏஏ
[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRzLgtgUA2ps7MyUNXWt1TfUlGrVTbArm9P721pASjIFr8zSen-[/im]

மாய உலகம் said... 121

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...
ஸலாம் சகோ.மாயுலகம்,
இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை கேள்விப்பட்டு இருந்தாலும், மீண்டும் மீண்டும் நியாபகப்படுத்திக்கொள்வது விழிப்புணர்வோடு இருக்க உதவும். இதுபோன்ற குற்றவாளிகளுக்கு தயவு தாட்சண்யமின்றி உச்சபட்ச தண்டனைகள் தரப்படல் வேண்டும். சமூக ஒழுக்கம் சாகாமல் காக்கப்படல் வேண்டும். பகிர்வுக்கு நன்றி சகோ.//

வாங்க சகோ! சரியாக சொன்னீர்கள் சமூக விரோதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கபட்டால் மட்டுமே.. சக மக்கள் நிம்மதியாக வாழமுடியும்... கருத்துக்கு நன்றி சகோ!

மாய உலகம் said... 122

ஆமினா said...
விழிப்புணர்வூட்டும் பதிவு சகோ.

அடிக்கடி இப்படி பட்ட எச்சரிக்கை பதிவுகள் போடுவது பலரை உஷார் படுத்தி தீய வழியில் இருந்து தடுக்க உதவும்.

வாழ்த்துக்கள்//

வாங்க சகோ! தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said... 123

நல்ல எச்சரிக்கைப் பதிவு. கல்லூரி/வேலைக்குச் செல்லும் பெண்கள் அவசியம் இது போன்ற விஷ்யங்களைப் பற்றி தெரிந்து உஷாராக இருக்க வேண்டும்!

இமா க்றிஸ் said... 124

குட்டிப் பசங்க பற்றி நீங்கள் பகிர்ந்திருக்கும் கவலை எனக்கு எப்பவுமே இருக்கு.

மாய உலகம் said... 125

பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல எச்சரிக்கைப் பதிவு. கல்லூரி/வேலைக்குச் செல்லும் பெண்கள் அவசியம் இது போன்ற விஷ்யங்களைப் பற்றி தெரிந்து உஷாராக இருக்க வேண்டும்!//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said... 126

இமா said...
குட்டிப் பசங்க பற்றி நீங்கள் பகிர்ந்திருக்கும் கவலை எனக்கு எப்பவுமே இருக்கு.//

வாங்க டீச்சர்... ஆமாங்க எதிர்கால சந்ததியினரை நினைத்தால் தான் வேதனையத்தான் இருக்கு...

நண்டு @நொரண்டு -ஈரோடு said... 127

விழிப்புணர்வுப்பதிவு. பகிர்வுக்கு நன்றி .

Mahan.Thamesh said... 128

போலி விளம்பரங்கள் தொடர்பில் மக்கள் கவனம் தேவை . நல்ல எச்சரிக்கை பதிவு

மாய உலகம் said... 129

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
விழிப்புணர்வுப்பதிவு. பகிர்வுக்கு நன்றி .//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said... 130

Mahan.Thamesh said...
போலி விளம்பரங்கள் தொடர்பில் மக்கள் கவனம் தேவை . நல்ல எச்சரிக்கை பதிவு//

வாங்க நண்பா.. கருத்துக்கு மிக்க நன்றி.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said... 131

சாந்தியும், சமாதானமும் உங்கள் மீதும் நிலவட்டுமாக

பதிவை பார்த்தவுடன் பகீரென்றது.

குழந்தைகளை கண்காணிப்பதும் இப்போது அவசியமாகி விட்டது. குழந்தைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டியது தான். ஆனால் தன் குழந்தை இதை போல் செய்யது, அதற்கு இது வயதல்ல என்று நினைக்கும் பெற்றோர்கள் உஷாராக இருக்க வேண்டும். வளரும் போதே நல்ல ஒழுக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். தொலைக்காட்சி முன் என்னேரமும் அமருவதையும், செல்பேசியில் என்னேரமும் உரயாடுவதையும் தவிர்க்க வலியுறுத்த வேண்டும்.

தோழமையுடன்
அபு நிஹான்

மாய உலகம் said... 132

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...
சாந்தியும், சமாதானமும் உங்கள் மீதும் நிலவட்டுமாக

பதிவை பார்த்தவுடன் பகீரென்றது.

குழந்தைகளை கண்காணிப்பதும் இப்போது அவசியமாகி விட்டது. குழந்தைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டியது தான். ஆனால் தன் குழந்தை இதை போல் செய்யது, அதற்கு இது வயதல்ல என்று நினைக்கும் பெற்றோர்கள் உஷாராக இருக்க வேண்டும். வளரும் போதே நல்ல ஒழுக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். தொலைக்காட்சி முன் என்னேரமும் அமருவதையும், செல்பேசியில் என்னேரமும் உரயாடுவதையும் தவிர்க்க வலியுறுத்த வேண்டும்.

தோழமையுடன்
அபு நிஹான்//

வாங்க தோழா! மிகச்சரியாக அழகாக சொன்னீர்கள்... பெற்றோர்கள் கையில் தான் இருக்கிறது... தங்களது கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.

vadakaraithariq said... 133

உங்கள் பதிவை வலைசரத்தில் இணைத்துள்ளேன். பார்த்துவிட்டு கருத்துக்களை பகிரவும்.தாரிக்

http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_9654.html


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out