Sunday 24 July, 2011

மெல்லிசை கேளுங்கள்



ஆஹா ஆஹா என்ன இனிமையான இசை
இசை கேட்டால் புவி அசைந்தாடும்… என்ற படல் வரிகளை கேட்டிருக்கலாம், அரக்க குல மன்னன் ராவணனின் இசைக்கு மயங்கி கற்பாறையே உருகியதாக புராணங்கள் கூறுகின்றன.



இது தவிர குறிப்பிட்ட ராகத்தை இசைப்பதன் மூலம் மழை பொழிய
வைக்க முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது. மேலும் நோய்களை

குணமாக்கும் சக்தி  இசைக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 



welcome elvis

கர்நாடக இசையில் குறிப்பிட்ட சில ராகங்களையும் அது தொடர்பான இசைக்கோர்வைகளை கேட்பதன் மூலம்  நோய்களை குணமாக்க
முடியும் என்று தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவித்தன. 
இத்தாலி நாட்டு விஞ்ஞானிகளும் இதை தங்களது ஆய்வுகள் மூலம் 
உறுதி செய்துள்ளனர். 


இங்கு பவியா நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருந்துகள் பிரிவு பேராசிரியர் லூசியானோ பெர்னார்டி தலைமையில் இது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்றது.


 அப்போது வெளியான தகவல்கள் வருமாறு:-
இசை கேட்கும்போது இருதய நோய் படிப்படியாக குணம் ஆகிறது. குறிப்பாக மாரடைப்புக்கு பிறகு நோயாளி குணமாக மெல்லிசை பெரிதும் உதவுகிறது. மனம் அமைதி பெற இந்த மெல்லிசை வழிகாட்டுகிறது.
ஸ ரி க ம ப த நி 
இசையே மருந்து என்பது தொடர்பான இந்த ஆய்வுக்கு ஆரோக்கியமான உடல் நிலையில் உள்ள 24 பேர்களை தேர்வு செய்தனர்.இவர்களில் ஒரு பிரிவுனருக்கு ஹெட்போன் மூலம் மெல்லிசையே தினமும் குறிப்பிட்ட  நேரம் கேட்கச்செய்தனர்..
அப்போது இரு தரப்பினரின் ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு மருத்துவ அளவீடுகள் பரிசோதனை  செய்யப்பட்டன.

இதில் அதிரடியான இசையை கேட்டவர்களுக்கு தோலின் அடியில்
உள்ள ரத்தக்குழாயில் சுருக்கம் ஏற்பட்டது . இருதய துடிப்பு
அதிகரித்து ரத்த அழுத்தம் உயர்ந்தது. மூச்சு விடுவது 
ஒழுங்கற்ற நிலையில் காணப்பட்டது.


அதே நேரத்தில் மெல்லிசையை மிதமான சத்தத்தில் 
கேட்டவர்களுக்கு இருதய துடிப்பு சீராக இருந்தது. அவர்களது ரத்தகுழாய்கள் விரிவடைந்த நிலையில் ரத்த ஓட்டம்,
ரத்த அழுத்தம் சீராக காணப்பட்டது. இதே போன்ற ஆய்வு 
சாதாரண நோயாளிகளிடம் நடத்தப்பட்டது.
இதில் மெல்லிசை கேட்டவர்களுக்கு நோய் குணமாகும்
வேகம் அதிகமாககாணப்பட்டது. 

எனவே ஆபரேசனுக்கு பிறகு நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும்
 உடல்நல மேம்பாடு மருத்துவத்தின் போது மெல்லிசை முக்கிய பங்கு வகிப்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.  
 நன்றி - தினத்தந்தி

Click to check out my profile
     நான் கூட இசைக்கு மயங்கி எப்படி ஆடறேன் பாருங்க.... மெல்லிசையே... 






30 comments:

M.R said...

நல்ல தகவல் சகோ

ஹேமா said...

என் அனுபவமும் கூட இசை மருத்துவம்.எந்த மன உளைச்சலையும் ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும் மெல்லிய இசை !

Angel said...

குழப்பம் /அமைதியின்மை போன்ற நேரங்களில் மெல்லிசையை குறைந்த வாலியுமில் வைத்து கேட்டால் நல்ல பலன் கிடைக்கும் .
அது யாருங்க கிதார் வாசிக்கிறவர் ,நல்லா உற்சாகத்தில் இருக்கார் .

மாய உலகம் said...

M.R said...
//நல்ல தகவல் சகோ//

சகோவின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

மாய உலகம் said...

ஹேமா said...
//என் அனுபவமும் கூட இசை மருத்துவம்.எந்த மன உளைச்சலையும் ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும் மெல்லிய இசை !//

கரெக்டா சொன்னீங்க... கருத்துக்கு நன்றிங்க

மாய உலகம் said...

angelin said...
//குழப்பம் /அமைதியின்மை போன்ற நேரங்களில் மெல்லிசையை குறைந்த வாலியுமில் வைத்து கேட்டால் நல்ல பலன் கிடைக்கும் .
அது யாருங்க கிதார் வாசிக்கிறவர் ,நல்லா உற்சாகத்தில் இருக்கார் .//

வருகைக்கு நன்றி...வாங்க வாங்க... அதுவா கிதார் வாசிக்கிறது = பூனைக்குட்டி ராஜேஷ், அதுக்கு பக்கத்துல இருக்குறது நாய்க்குட்டி ராஜேஷ் , அதுக்கு கீழே இருக்கிறது மனுசகுட்டி ராஜேஷ் ....அப்படியே கொஞ்சம் காதை பொத்திக்குங்க ஆ ஆ ஆ ச ரி க ம ப த நி ஸா ...

முற்றும் அறிந்த அதிரா said...

வணக்கம் மாயா...
ஆஹா..... ஆஹா.... என்ன இனிமையான பூஸ்குட்டிகள்...:)). பூஸ்களுக்கு பாட மட்டுமில்ல, பாட்டை ரசிக்கவும் தெரிந்திருக்கு:))).

மெல்லிசை பற்றிய கருத்துக்கள் அழகு.

ஏன் மாயா... உங்கட உலகம் என்னைப் ஃபலோவராக இணையவிடுகுதில்லை?:((((.

மாய உலகம் said...

athira said...
வணக்கம் மாயா...
//ஆஹா..... ஆஹா.... என்ன இனிமையான பூஸ்குட்டிகள்...:)). பூஸ்களுக்கு பாட மட்டுமில்ல, பாட்டை ரசிக்கவும் தெரிந்திருக்கு:))).

மெல்லிசை பற்றிய கருத்துக்கள் அழகு.

ஏன் மாயா... உங்கட உலகம் என்னைப் ஃபலோவராக இணையவிடுகுதில்லை?:((((.//

வாங்க வாங்க பூனைக்குட்டி பிரியரே.... வாழ்த்துக்கு நன்றி ... என்னது ஃபாலோயரில் இணையமுடியவில்லையா ஆஹா ஒரு நண்பரை இழந்து விடுவேன் போலிருக்குதே.. யாரங்கே...யாருமே இல்லையா ... ஒரு ஐடியா திரும்ப ட்ரை பண்ணி பாருங்க...

athira said...

என் குற்றமா?
உங்க புளொக் குற்றமா?
யாரை நானும் குற்றம் சொல்ல?:).

இங்க மட்டுமில்லை மாயா, எந்த புளொக்கிலும் இன்று ஃபலோவராக எனக்கு அனுமதி இல்லையாம்...:((. ஏன் எனத் தெரியவில்லை, பார்ப்போம்.

ஆஆஆஆஆஅ ஒரு நட்பை இழந்துகொண்டிருக்கிறீங்க காப்பாத்திடுங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

மாய உலகம் said...

athira said...
என் குற்றமா?
உங்க புளொக் குற்றமா?
யாரை நானும் குற்றம் சொல்ல?:).

//இங்க மட்டுமில்லை மாயா, எந்த புளொக்கிலும் இன்று ஃபலோவராக எனக்கு அனுமதி இல்லையாம்...:((. ஏன் எனத் தெரியவில்லை, பார்ப்போம்.

ஆஆஆஆஆஅ ஒரு நட்பை இழந்துகொண்டிருக்கிறீங்க காப்பாத்திடுங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))//

என் செம்புக்கும் துண்டுக்கும் வேலை வச்சுட்டாய்ங்க்ய .... யாரங்கே ஃபாலோயர் அனுமதி தாரும்... என்ன out of station-ஆ ஹலோ ஹலொ ஹல்லலோ... ச்சே சிக்னல் கட் ஆயிடுச்சே .... நல்ல வேளை யாரும் பாக்குல துண்ட முக்காட போட்டுகிட்டு அப்ப்டியே எஸ்கேப் ஆகிடவேண்டியதான்....

athira said...

//என் செம்புக்கும் துண்டுக்கும் வேலை வச்சுட்டாய்ங்க்ய//

கிக்..கிக்...கீஈஈஈஈஈ:) எதுக்கு துண்டும் செம்பும்?:)). கண்ணாடிஜன்னல் கழுவுறீங்களோ?:)))).

ஆஆஆஆஆஆஅ... மீஈஈஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

Kousalya Raj said...

இசை பற்றி சொல்லனும்னா நிறைய சொல்வேன், என் வாழ்கையில் இசையின் பங்கு மிக அதிகம்...

மனிதன் உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணம் இசை !

இசை பற்றிய இந்த பகிர்வுக்கு என் வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

உண்மைதான்.அருமையான பகிர்வு.வயிற்றுனுள் இருக்கும் குழந்தைக்கூட இசையின் உதவியால் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

மகேந்திரன் said...

இசையின் மருத்துவம்
அழகான படைப்பு
எதுவும் இங்கே சாத்தியமே என கூக்குரலிடும்
சில இயற்கை மருத்துவங்களில்
இசையும் ஒன்று என ஆணித்தரமாக படைத்திருக்கிறீர்கள்.
நன்றி.

இமா க்றிஸ் said...

இசை பற்றி நீங்கள் கொடுத்துள்ள தகவல்கள் நன்று.

இசை எப்படி மனதை ரிலாக்ஸ்ட் ஆக்குமோ அதுபோல சில கமண்ட்டுகளும். முன்னாலயே பார்த்து நினச்சிட்டுப் போனன். இப்ப என்ன கமண்ட் இருக்கு எண்டு பார்க்க வந்தனான். சரியாத்தான் இருக்கு நான் நினைச்சது. ;))

கவனம் ராஜேஷ், அதிரா மாய உலகத்திலயும் ப்ராஞ்ச் ஓப்பின் பண்ணிரப் போறா ;))

//கிதார் வாசிக்கிறது = பூனைக்குட்டி ராஜேஷ், அதுக்கு பக்கத்துல இருக்குறது நாய்க்குட்டி ராஜேஷ் , அதுக்கு கீழே இருக்கிறது மனுசகுட்டி ராஜேஷ் ....அப்படியே கொஞ்சம் காதை பொத்திக்குங்க ஆ ஆ ஆ ச ரி க ம ப த நி ஸா ... // பொத்தியாச்சு ;)

சென்னை பித்தன் said...

உன்மையே!ஒவ்வொரு ராகமும் ஒரு நோய்க்கு மருந்து என ஆராய்ச்சி செய்து சொல்லியிருக்கிறார்கள்.நல்ல பகிர்வு!

மாய உலகம் said...

athira said...
//என் செம்புக்கும் துண்டுக்கும் வேலை வச்சுட்டாய்ங்க்ய//

கிக்..கிக்...கீஈஈஈஈஈ:) எதுக்கு துண்டும் செம்பும்?:)). கண்ணாடிஜன்னல் கழுவுறீங்களோ?:)))).

ஆஆஆஆஆஆஅ... மீஈஈஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...//

கண்ணாடி ஜன்னல் கழுவுறதா... நாட்டாமைய கவுத்துட்டீங்க... அதென்ன ஆ மீ எஸ்... புது ஸ்வர்ங்களா இருக்கு எனக்கு கொஞ்சம் கத்து கொடுங்க....ஆஆஆஆஆஆஅ... மீஈஈஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... தண்ணில உக்காந்து சாதகம் பண்ணனுமா... இல்ல தண்ணி போட்டுக்கிட்டு சாதகம் பண்ணனுமா....

மாய உலகம் said...

Kousalya said...
//இசை பற்றி சொல்லனும்னா நிறைய சொல்வேன், என் வாழ்கையில் இசையின் பங்கு மிக அதிகம்...

மனிதன் உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணம் இசை !

இசை பற்றிய இந்த பகிர்வுக்கு என் வாழ்த்துக்கள்//

சரியா சொன்னீங்க தங்களின் வருகையும் வாழ்த்தும் வசந்தம் நன்றி...

மாய உலகம் said...

ஸாதிகா said...
//உண்மைதான்.அருமையான பகிர்வு.வயிற்றுனுள் இருக்கும் குழந்தைக்கூட இசையின் உதவியால் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.//

அசத்தலான உண்மைங்க ... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க..

மாய உலகம் said...

மகேந்திரன் said...
//இசையின் மருத்துவம்
அழகான படைப்பு
எதுவும் இங்கே சாத்தியமே என கூக்குரலிடும்
சில இயற்கை மருத்துவங்களில்
இசையும் ஒன்று என ஆணித்தரமாக படைத்திருக்கிறீர்கள்.
நன்றி.//

நண்பர் மகேந்திரனின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சியை தருகிறது ...நன்றி நண்பரே!

மாய உலகம் said...

இமா said...
//இசை பற்றி நீங்கள் கொடுத்துள்ள தகவல்கள் நன்று.

இசை எப்படி மனதை ரிலாக்ஸ்ட் ஆக்குமோ அதுபோல சில கமண்ட்டுகளும். முன்னாலயே பார்த்து நினச்சிட்டுப் போனன். இப்ப என்ன கமண்ட் இருக்கு எண்டு பார்க்க வந்தனான். சரியாத்தான் இருக்கு நான் நினைச்சது. ;))

கவனம் ராஜேஷ், அதிரா மாய உலகத்திலயும் ப்ராஞ்ச் ஓப்பின் பண்ணிரப் போறா ;))

//கிதார் வாசிக்கிறது = பூனைக்குட்டி ராஜேஷ், அதுக்கு பக்கத்துல இருக்குறது நாய்க்குட்டி ராஜேஷ் , அதுக்கு கீழே இருக்கிறது மனுசகுட்டி ராஜேஷ் ....அப்படியே கொஞ்சம் காதை பொத்திக்குங்க ஆ ஆ ஆ ச ரி க ம ப த நி ஸா ... // பொத்தியாச்சு ;)//

தாங்களின் வருகையும் வாழ்த்தும் மிகுந்த சந்தோசத்தை தருகிறது நன்றிகள்... என்ன ஆதிரா பிராஞ்ச் ஒப்பன் பண்ண்போறாங்களா யாரங்கே..யாரங்கே.. என்னய்யா இது நான் கூப்பிட்டா யாருமே இருக்க மாட்றாங்க.... காத பொத்திக்கிட்டீங்களா... ஐ நான் பாடபோறேன்.....

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
//உன்மையே!ஒவ்வொரு ராகமும் ஒரு நோய்க்கு மருந்து என ஆராய்ச்சி செய்து சொல்லியிருக்கிறார்கள்.நல்ல பகிர்வு!//

ஐயாவின் வருகை சந்தோசத்தில் பித்தம் கொள்ளவைக்கிறது.... கருத்துக்கு நன்றிகள்

Yaathoramani.blogspot.com said...

நோய் தீர்க்கும் இசை குறித்த தங்கள் பதிவும்
அதற்கான படமும் மிக மிக அருமை
இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்
என்ற எண்ணத்ததை தவிர்க்க இயலவில்லை
வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

Ramani said...
//நோய் தீர்க்கும் இசை குறித்த தங்கள் பதிவும்
அதற்கான படமும் மிக மிக அருமை
இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்
என்ற எண்ணத்ததை தவிர்க்க இயலவில்லை
வாழ்த்துக்கள்//

தங்களின் விருப்பமும் கருத்தும் சந்தோசத்தை தருகிறது.... நன்றிகள்

shanmugavel said...

இசை பற்றி கூறப்படுவது சரிதான்.மெல்லைசைக்கு மயங்காதவர்கள் யார்?

ஆகுலன் said...

நான் இப்பகூட இசை கேட்டுகொன்டுதான் இருக்கிறேன்...

மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)

ம.தி.சுதா said...

மென்னிசையை தங்கள் புகைப்படங்களொடே ரொம்ப ரசிச்சேம்பா...

மாய உலகம் said...

shanmugavel said...
//இசை பற்றி கூறப்படுவது சரிதான்.மெல்லைசைக்கு மயங்காதவர்கள் யார்?//

நான்கூட மயங்கி எப்படி ஆட்றேன்னு பாருங்க நண்பரே..

[im]http://i1099.photobucket.com/albums/g389/rajeshnedveera80/adad.png[/im]

மாய உலகம் said...

ஆகுலன் said...
//நான் இப்பகூட இசை கேட்டுகொன்டுதான் இருக்கிறேன்...

மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)//

இசைகேட்டுக்கொண்டே இருங்கள் நண்பரே.. வருகைக்கு நன்றிகள்

மாய உலகம் said...

மாய உலகம் said...
♔ம.தி.சுதா♔ said...
//மென்னிசையை தங்கள் புகைப்படங்களொடே ரொம்ப ரசிச்சேம்பா...//

[ma][IM]http://i1099.photobucket.com/albums/g389/rajeshnedveera80/vdRXK6GRO-ksDi6LmknKlA.jpg[/IM] [/ma]
[ma]
தங்களின் வருகையும் ரசிச்ச விதமும் வாழ்த்தும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது நன்றிகள் [/ma]


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out