Friday 9 September, 2011

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - திருவோணம்

(திரு.பி.கே.பாபுராஜ் என்ற மலையாள இயக்குனர்.. 2002 -ல்
 தமிழில் படம் இயக்கி இசையமைக்க திட்டம் போட்டிருந்தார்...அவரிடம் வாய்ப்புகேட்டு சென்ற பொழுது எனக்கு lyrics எழுதும் வாய்ப்பை கொடுத்திருந்தார்...  அவர் வாயாலயே டீயூன் போட்டுக்காண்பிக்க நான் lyrics எழுதினேன்.... ஆனால் படம் ட்ராப் ஆகி ரெக்கார்டு கூட செய்யாமல் போனது. என் வாழ்வில் எழுதிய முதல் திரைப்பட பாடல் உங்கள் பார்வைக்காக)
சூழ்நிலை - காதலனை நினைத்து காதலி ஏக்கத்துடன் பாடுவது....வெண்ணிலவை தனது காதலனாக நினைத்து உருகுவது (பல்லவி)



                                                    பல்லவி

ஐஸ்க்ரீம் வானிலே


தித்திக்கும் செர்ரியாய்


வெண்ணிலா காயுதே


என்னிடம் பாயுதே


தாவி வரும் இதழ்கள் இணையும் (ஐஸ்க்ரீம்)

                                                         சரணம் 1


{ காதலனான வெண்ணிலவு  மேகம் சூழ்ந்து மறைந்து
 மழைத்துளியாய் வந்து அவள் மேல் விழ... காதலன் மழையாய் வந்து 
தன்னை தொடுவது போல் உணர்வது }


தேனிலா என்னை தேடிவா


காதலால் என்னை காணவா


ஏய் நிலா இங்கே பாரடா


பசிக்குதே நீயே ஊட்டவா


மின்னல் காணும் முன்னே


எந்தன் மண்ணில் சாய வாடா


உன்னை நானும் உண்ண


ஆஹா என்னை நீயும் உண்ண அடடா நீ வா




இந்த ஒரு துளி உயிரினில்
உறவுகள் உருகிட இதயங்கள் இணையுதடா             (ஐஸ்க்ரீம்)



                                                             சரணம் 2



{ மழை வருவது போல் வராமல்....
 பாசாங்கு காட்டி ஏமாற்ற ...ஏக்கத்துடன் பார்த்த நாயகி...
நீ வருவது போல் தெரியவில்லை எனது மோகமும் தீரவில்லை எனது உறக்கத்தை கெடுக்காமல் தூங்கவாவது வையடா }


பால் நிலா எங்கே போனதோ


பாழ்மனம் இங்கு ஏங்குதே


தீ விழா மின்னல் காட்டுதே


நீ உலா வர வேண்டுமே.


கொள்ளைக்காரன் தானா


உள்ளம் கொள்ளைக்கொண்டது நீயா


துள்ளி துள்ளி ஆட பாட அள்ளி தந்தது நீயா.... அடடா நீ வா


இந்த சிறு பணி குளிரினில் இரவுகள் விலகுதே பாவி உறங்க வையடா... 

(ஐஸ்க்ரீம்)

=========================================================================

இன்று ஓணம் கொண்டாடும் அன்பர்களுக்கு திருவோணம் நல்வாழ்த்துக்கள்.....














77 comments:

Unknown said...

மாப்ள பகிர்வுக்கு நன்றி....உங்க உழைப்பு வீண் போகாது...நட்புடன் விக்கி!

மகேந்திரன் said...

அட... பாட்டு கிளப்புதே நண்பரே...

மகேந்திரன் said...

உங்கள் சிந்தையில் விளையும்
ஆக்க விதைகள்
பெரும் விருட்சம் நண்பரே.....

நன்கு வேரூன்றட்டும்.

மகேந்திரன் said...

மகாபலி எனும் அசுரச் சக்கரவர்த்தி
தன ஆட்சி காலங்களில் கேரளா பரப்புகளில்
நிறைய நல்ல விஷயங்கள் செய்திருக்கிறார்
அவரை வரவேற்க கேரளா மக்கள்
வண்ணக் கோலங்களுடன் மங்களமாக
கொண்டாடும் திருவிழாக்கோலம்
உங்கள் படைப்பில் கண்டேன்...
இனிமையாக இருந்தது.

Anonymous said...

சகோதரா! ஓடியோ பாடல்கள் கேட்கவில்லை. தாங்களாக எழுதிய கவிதை பிடித்தது. வலை திறந்ததும் ரூம் போட்டு என்ற வரி கண்ணில் பட சிரிப்பு வரும் வாழ்த்துகள்...
வேதா. இலங்காதிலகம்.

செங்கோவி said...

அட..அசர வைக்கும் பாடல்..

தம்பிகிட்ட பலதிறமை ஒளிஞ்சிருக்கு போல..வாழ்த்துகள்.

Anonymous said...

கலக்குறீங்க ராஜேஷ்....பாட்டு தூள்...சகலகலாவல்லவரே...

Radha rani said...

கவிதை அருமை .வாழ்த்துக்கள்.

காந்தி பனங்கூர் said...

அருமையான கவி வரிகள் நண்பா.

கூடல் பாலா said...

தங்களுக்கு பாடலாசிரியருக்கான தகுதிகள் உள்ளன ....கலக்கல் !

கவி அழகன் said...

பாட்டு அழகிய மெலடி

அம்பாளடியாள் said...

அருமையான படைப்பு வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .
என் தளத்திற்கு இன்று அவசியம் நீங்கள் வரவேண்டும் .மறந்துவிடாமல்
ஓட்டுக்கள் அத்தனையையும் போட்டிருங்க .நன்றி சகோ .....

RAMA RAVI (RAMVI) said...

அழகான கவிதை.
வாழ்த்துக்கள்.
தொடர்ந்து முயற்சி செய்யவும், கட்டயமாக வெற்றி கிடைக்கும்.

rajamelaiyur said...

கவிதை அருமை நண்பா

rajamelaiyur said...

இன்று என் வலையில்

பெரியவங்க என்ன சொல்றாங்கனா?

குறையொன்றுமில்லை. said...

நல்ல பாடலாசிரியருக்கு வாழ்த்துக்கள்.
நல்லா இருக்கு.

கதம்ப உணர்வுகள் said...

பாடல் வரிகள் ரசிக்கும்படி இருந்தது ராஜேஷ்...

மிகப்பெரிய பாடலாசிரியராக வர என் அன்பு வாழ்த்துகள்....

தமிழ்வாசி பிரகாஷ் said...

பாடல் வரிகள் அருமை... முயற்சியை கை விடாதீர்கள்.

Angel said...

பாடல் நல்லா இருக்கு ராஜேஷ் .தொடர்ந்து முயற்சி செய்யுங்க .கூடிய விரைவில் நீங்கள் நினைத்த இலக்கை அடைவீர்கள்

Yaathoramani.blogspot.com said...

பாடல் வரிகளைக் கொண்டே
அதன் உட்பொருளைக் கொண்டே
பாடும் சூழல் மிக அழகாக கண் முன் விரிகிறது
சகல கலா வல்லவராக இருப்பீர்கள் போல இருக்கே
வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம 8

M.R said...

thamil manam 10

M.R said...

பாடல் அருமை சகோ

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

உங்களுக்கு முதலில் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் பாஸ்.

நிரூபன் said...

உங்க ப்ளாக்கை மட்டும் நாம காப்பி பேஸ்ட் பண்ணி கமெண்ட் போட முடியாதவாறு வைச்சிருக்கிறீங்க?

நாம எப்படிக் கமெண்ட் போடுவது?

நிரூபன் said...

(திரு.பி.கே.பாபுராஜ் என்ற மலையாள இயக்குனர்.. 2002 -ல்
தமிழில் படம் இயக்கி இசையமைக்க திட்டம் போட்டிருந்தார்...அவரிடம் வாய்ப்புகேட்டு சென்ற பொழுது எனக்கு lyrics எழுதும் வாய்ப்பை கொடுத்திருந்தார்... அவர் வாயாலயே டீயூன் போட்டுக்காண்பிக்க நான் lyrics எழுதினேன்.... ஆனால் படம் ட்ராப் ஆகி ரெக்கார்டு கூட செய்யாமல் போனது. என் வாழ்வில் எழுதிய முதல் திரைப்பட பாடல் உங்கள் பார்வைக்காக)//

ஐயோ..கவலையான விடயமே நண்பா..
காலம் இப்படித் தான் நல்ல கலைஞர்களின் வாழ்வில் தவறிழைத்து விடுகின்றது,

நம்பிக்கையோடு காத்திருங்கள். உங்களின் கனவு விரைவில் நிறை வேறும் நண்பா.

நிரூபன் said...

ஐஸ்க்ரீம் வானிலே


தித்திக்கும் செர்ரியாய்


வெண்ணிலா காயுதே


என்னிடம் பாயுதே


தாவி வரும் இதழ்கள் இணையும் (ஐஸ்க்ரீம்)//

ஆரம்ப வரிகள் ஐஸ்கிரீம் போல மனதைக் கொள்ளை கொண்டாலும்,

வானிலே தேனிலா ஆடுதே....
பாடுதே.........

பாடலின் சரணத்தை நினைவுபடுத்துகிறது நண்பா.,

தவறாக இருந்தால் மன்னிக்கவும்,

நிரூபன் said...

கொள்ளைக்காரன் தானா


உள்ளம் கொள்ளைக்கொண்டது நீயா


துள்ளி துள்ளி ஆட பாட அள்ளி தந்தது நீயா.... அடடா நீ வா


இந்த சிறு பணி குளிரினில் இரவுகள் விலகுதே பாவி உறங்க வையடா... //

அவ்...உறக்கத்தைக் கலைத்து விட்டீர்கள் அல்லவா...

அவ்.................

நிரூபன் said...

கவி வரிகள் கலக்கல் நண்பா., ஆனால் கொஞ்சம் இம்பிரேசன் இருப்பதாகத் தெரிகிறது.

தவறாக நான் ஏதும் சொல்லியிருப்பின் மன்னிக்கவும், இதனால் எங்கள் நட்பிற்கும் களங்கம் ஏற்படாது என்று நினைக்கிறேன்.

Mathuran said...

அருமையான பாடல்...

நிச்சயம் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.. அப்போது கலக்குங்கள்

shanmugavel said...

நல்ல பாடல் நண்பா! ரசித்தேன்.என்னால் இரவு வேளையில்தான் கமெண்ட் போட முடியும்.கொஞ்சம் லேட்.

மாய உலகம் said...

விக்கியுலகம் said...
மாப்ள பகிர்வுக்கு நன்றி....உங்க உழைப்பு வீண் போகாது...நட்புடன் விக்கி!//

வாங்க மாம்ஸ்... உங்க வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

மகேந்திரன் said...
அட... பாட்டு கிளப்புதே நண்பரே...//

வாங்க நண்பரே...நன்றி

மாய உலகம் said...

மகேந்திரன் said...
உங்கள் சிந்தையில் விளையும்
ஆக்க விதைகள்
பெரும் விருட்சம் நண்பரே.....

நன்கு வேரூன்றட்டும்.//

நன்றி நண்பரே

மாய உலகம் said...

மகேந்திரன் said...
மகாபலி எனும் அசுரச் சக்கரவர்த்தி
தன ஆட்சி காலங்களில் கேரளா பரப்புகளில்
நிறைய நல்ல விஷயங்கள் செய்திருக்கிறார்
அவரை வரவேற்க கேரளா மக்கள்
வண்ணக் கோலங்களுடன் மங்களமாக
கொண்டாடும் திருவிழாக்கோலம்
உங்கள் படைப்பில் கண்டேன்...
இனிமையாக இருந்தது.//

அழகாக சொன்ன தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே

மாய உலகம் said...

kovaikkavi said...
சகோதரா! ஓடியோ பாடல்கள் கேட்கவில்லை. தாங்களாக எழுதிய கவிதை பிடித்தது. வலை திறந்ததும் ரூம் போட்டு என்ற வரி கண்ணில் பட சிரிப்பு வரும் வாழ்த்துகள்...
வேதா. இலங்காதிலகம்.//

வாங்க சகோ! தங்களின் சந்தோசமான கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

செங்கோவி said...
அட..அசர வைக்கும் பாடல்..

தம்பிகிட்ட பலதிறமை ஒளிஞ்சிருக்கு போல..வாழ்த்துகள்.//

வாங்க சகோ! வாழ்த்துக்கு நன்றி சகோ

மாய உலகம் said...

ரெவெரி said...
கலக்குறீங்க ராஜேஷ்....பாட்டு தூள்...சகலகலாவல்லவரே...//

வாங்க ரெவரி.... கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

மாய உலகம் said...

ராதா ராணி said...
கவிதை அருமை .வாழ்த்துக்கள்.//

வாங்க.. வாங்க.. வாழ்த்துக்கு நன்றிகள்

மாய உலகம் said...

காந்தி பனங்கூர் said...
அருமையான கவி வரிகள் நண்பா.//

வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

koodal bala said...
தங்களுக்கு பாடலாசிரியருக்கான தகுதிகள் உள்ளன ....கலக்கல் !//

வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

கவி அழகன் said...
பாட்டு அழகிய மெலடி//

மெலடி என்பதை சரியாக கணித்த.. நண்பருக்கு வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...
அருமையான படைப்பு வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .
என் தளத்திற்கு இன்று அவசியம் நீங்கள் வரவேண்டும் .மறந்துவிடாமல்
ஓட்டுக்கள் அத்தனையையும் போட்டிருங்க .நன்றி சகோ .....//

வாங்க சகோ! கருத்துக்கு நன்றி... தங்கள் தளத்தில் எனது ஓட்டுக்களும் இருக்கும் சகோ

மாய உலகம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
கவிதை அருமை நண்பா

வாங்க நண்பா நன்றி

மாய உலகம் said...

Lakshmi said...
நல்ல பாடலாசிரியருக்கு வாழ்த்துக்கள்.
நல்லா இருக்கு.//

வாங்கம்மா...வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

மஞ்சுபாஷிணி said...
பாடல் வரிகள் ரசிக்கும்படி இருந்தது ராஜேஷ்...

மிகப்பெரிய பாடலாசிரியராக வர என் அன்பு வாழ்த்துகள்....//

வாங்க வாங்க..தங்களது கருத்துக்கும் அன்பு வாழ்த்துக்கும் நன்றி

மாய உலகம் said...

தமிழ்வாசி - Prakash said...
பாடல் வரிகள் அருமை... முயற்சியை கை விடாதீர்கள்.//

வாங்க நண்பரே! கைவிட மாட்டேன் நண்பரே. வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

angelin said...
பாடல் நல்லா இருக்கு ராஜேஷ் .தொடர்ந்து முயற்சி செய்யுங்க .கூடிய விரைவில் நீங்கள் நினைத்த இலக்கை அடைவீர்கள்//

வாங்க தோழி...தங்களது வாழ்த்துக்கு நன்றிகள்

மாய உலகம் said...

Ramani said...
பாடல் வரிகளைக் கொண்டே
அதன் உட்பொருளைக் கொண்டே
பாடும் சூழல் மிக அழகாக கண் முன் விரிகிறது
சகல கலா வல்லவராக இருப்பீர்கள் போல இருக்கே
வாழ்த்துக்கள்

த.ம 8//

வாங்க சகோ! ஆழமான கருத்துக்கும் வாழ்த்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றிகள்

மாய உலகம் said...

M.R said...
thamil manam 10

பாடல் அருமை சகோ//

வாங்க சகோ நன்றி

மாய உலகம் said...

நிரூபன் said...
வணக்கம் பாஸ்,

உங்களுக்கு முதலில் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் பாஸ்.//

நன்றி பாஸ்

மாய உலகம் said...

நிரூபன் said...
உங்க ப்ளாக்கை மட்டும் நாம காப்பி பேஸ்ட் பண்ணி கமெண்ட் போட முடியாதவாறு வைச்சிருக்கிறீங்க?

நாம எப்படிக் கமெண்ட் போடுவது?//

ஹா ஹா...

மாய உலகம் said...

நிரூபன் said...
(திரு.பி.கே.பாபுராஜ் என்ற மலையாள இயக்குனர்.. 2002 -ல்
தமிழில் படம் இயக்கி இசையமைக்க திட்டம் போட்டிருந்தார்...அவரிடம் வாய்ப்புகேட்டு சென்ற பொழுது எனக்கு lyrics எழுதும் வாய்ப்பை கொடுத்திருந்தார்... அவர் வாயாலயே டீயூன் போட்டுக்காண்பிக்க நான் lyrics எழுதினேன்.... ஆனால் படம் ட்ராப் ஆகி ரெக்கார்டு கூட செய்யாமல் போனது. என் வாழ்வில் எழுதிய முதல் திரைப்பட பாடல் உங்கள் பார்வைக்காக)//

ஐயோ..கவலையான விடயமே நண்பா..
காலம் இப்படித் தான் நல்ல கலைஞர்களின் வாழ்வில் தவறிழைத்து விடுகின்றது,

நம்பிக்கையோடு காத்திருங்கள். உங்களின் கனவு விரைவில் நிறை வேறும் நண்பா.//

தங்களது நம்பிக்கை தரும் கருத்துக்கு நன்றி நண்பா

மாய உலகம் said...

நிரூபன் said...
ஐஸ்க்ரீம் வானிலே


தித்திக்கும் செர்ரியாய்


வெண்ணிலா காயுதே


என்னிடம் பாயுதே


தாவி வரும் இதழ்கள் இணையும் (ஐஸ்க்ரீம்)//

ஆரம்ப வரிகள் ஐஸ்கிரீம் போல மனதைக் கொள்ளை கொண்டாலும்,

வானிலே தேனிலா ஆடுதே....
பாடுதே.........

பாடலின் சரணத்தை நினைவுபடுத்துகிறது நண்பா.,

தவறாக இருந்தால் மன்னிக்கவும்,//

================================
கருத்து சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது பாஸ்... உங்களது வினாவுக்கு சரியான பதில் கொடுப்பது எனது கடமை நண்பா... இதோ

பல்லவி

ஆண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை மீறும் நேரமே ஆடை நான் தானே

பெண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை மீறும் நேரமே ஆடை நான் தானே ஒய்

ஆண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா

(இசை) சரணம் - 1

ஆண் : வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன்
வாசப்பூவை கையில் அள்ளி பார்க்கிறேன்

பெண் : மாலை காற்றில் காதல் ஊஞ்சல் போடவா
காமன் தேசம் போகும் தேரில் ஆடவா

ஆண் : ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே
வானம் தாலாட்டுதே வா

பெண் : நாளும் மார் மீதிலே ஆடும் பூவை
தோளில் யார் சூடுவார் தேவனே

ஆண் : மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
தேவனே சூடுவான்

பெண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா

மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை மீறும் நேரமே ஆடை நான் தானே ஒய்

ஆண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா

(இசை) சரணம் - 2

ஆ & பெ : லாலா லாலா லாலா லாலா லாலா லாலா
லாலா லாலா லாலா லாலா லாலா லாலா
லாலா லாலா லாலா லாலா

{ஆண் : ஒவர்லாப் ஜாகாஜா
ஜாகாஜா ஜாகாஜாஜாகாஜா ஜாகாஜா
ஜாகாஜா ஜாகாஜாஜாகாஜா ஜாகாஜா
ஜாகாஜா ஜாகாஜாஜாகாஜா ஜாகாஜா}

பெண் : பூவை போல தேகம் மாறும் தேவதை
பார்வை போதும் மேடை மேலே ஆடுதே

ஆண் : பாதி கண்கள் மூடும் காதல் தேவியே
மோக ராகம் பாடும் தேவன் வீனையே

பெண் : மன்னன் தோல் மீதிலே மஞ்சம் கண்டேன்
மாலை பூங்காற்றிலே நான்

ஆண் : ஆடும் பொன் மேகமே ஓடும் வானம்
காதலின் ஆலயம் ஆனதே

பெண் : கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்
கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்
ஓவியம் தீட்டுதே

ஆண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா

ஆண் : மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா

ஆண் : ஆசை மீறும் நேரமே ஆடை நான் தானே

பெண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா

ஆண் : மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே

ஆ & பெ : நாமும் கொஞ்சம் ஆடலாமா......

============================
இந்த பாடல் வரிகளுக்கும் எனது பாடல் வரிகளுக்கும் சுத்தமாக சம்பந்தமில்லை நண்பா ஹா ஹா... வானிலே தேனிலா என்ற வார்த்தை வைத்து மட்டும் நீங்கள் தவறாக நினைத்துவிட்டீர்கள்... . வரிகளும் ,வரிகளுக்கான அர்த்தங்களும் சிறிது கூட சம்பந்தமில்லை ....விரைவில் இதன் ஆடியோ நானே பாடி இணைக்க முயற்சிக்கிறேன்....அப்பொழுது இன்னும் எளிதாக புரியும் என நினைக்கிறேன்... நேரமிருந்தால் மறுபடியும் இரண்டையும் கம்பேர் செய்து விளக்கினால் சந்தோசப்படுவேன்.... ஹா ஹா நன்றி நண்பா

மாய உலகம் said...

நிரூபன் said...
கொள்ளைக்காரன் தானா


உள்ளம் கொள்ளைக்கொண்டது நீயா


துள்ளி துள்ளி ஆட பாட அள்ளி தந்தது நீயா.... அடடா நீ வா


இந்த சிறு பணி குளிரினில் இரவுகள் விலகுதே பாவி உறங்க வையடா... //

அவ்...உறக்கத்தைக் கலைத்து விட்டீர்கள் அல்லவா...

அவ்.................//

ஹா ஹா நீங்க என்னிக்கு பாஸ் உறங்கிருக்கீங்க.... நன்றி

மாய உலகம் said...

நிரூபன் said...
கவி வரிகள் கலக்கல் நண்பா., ஆனால் கொஞ்சம் இம்பிரேசன் இருப்பதாகத் தெரிகிறது.

தவறாக நான் ஏதும் சொல்லியிருப்பின் மன்னிக்கவும், இதனால் எங்கள் நட்பிற்கும் களங்கம் ஏற்படாது என்று நினைக்கிறேன்.//

விரைவில் உங்களுக்காக ஆடியோ இணைத்து அனுப்ப முயல்கிறேன்... நான் இந்த பாடலுக்கான சிட்சுவேசனை விளக்கி அதற்கு ஏற்றவாறு வரிகளையும் எழுதி பதிவிட்டிருக்கிறேன்... மேலே நீங்கள் நினைத்த பாடலையும் எனது பாடல் வரிகளையும் இணைத்து உள்ளேன்... மீண்டும் கம்பேர் செய்யவும்....இயக்குநர் டியூன் போடும் போது மோகன் பாட்டின் டியூன் போல் இருப்பதாக உள்ளதால் தான் பாடி இணைக்கலாம் என்ற எண்ணத்தை அவாய்ட் செய்தேன்.... ஹா ஹா இதற்கும் நமது நட்பிற்கும் எந்த கலங்கமும் வராது உங்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டிருக்கிறேன்... நன்றி பாஸ்

மாய உலகம் said...

மதுரன் said...
அருமையான பாடல்...

நிச்சயம் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.. அப்போது கலக்குங்கள்//

வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

மாய உலகம் said...

shanmugavel said...
நல்ல பாடல் நண்பா! ரசித்தேன்.என்னால் இரவு வேளையில்தான் கமெண்ட் போட முடியும்.கொஞ்சம் லேட்.//

நீங்கள் வருவதே எனக்கு சந்தோசம் தான் நண்பா...உங்களுக்கு எப்பொழுது சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அப்போழுது வாருங்கள் நண்பா.... தங்களது ரசனையான பாடலுக்கு நன்றி நண்பா

ஜெய்லானி said...

பாடல் அழகா இருக்கு . இன்னும் நிறைய எழுத முயற்சி செய்யுங்கள் :-)



நிறைய படங்கள் , வீடியோக்கள் இனைத்தால் பிளாக் லோட் ஆக நேரம் பிடிக்குது . :-)

அம்பாளடியாள் said...

அடுத்த ஆக்கம் காத்திருக்கு சகோ உங்கள் வரவுக்காய் ....

முற்றும் அறிந்த அதிரா said...

மாயாவைக் காணேல்லை:))
மாயாவைக் காணேல்லை:))
மாயாவைக் காணேல்லை:))
மாயாவைக் காணேல்லை:))
மாயாவைக் காணேல்லை:))
மாயாவைக் காணேல்லை:))
மாயாவைக் காணேல்லை:))
மாயாவைக் காணேல்லை:))
மாயாவைக் காணேல்லை:))
மாயாவைக் காணேல்லை:))

மாய உலகம் said...

athira said...
மாயாவைக் காணேல்லை:))
மாயாவைக் காணேல்லை:))
மாயாவைக் காணேல்லை:))
மாயாவைக் காணேல்லை:))
மாயாவைக் காணேல்லை:))
மாயாவைக் காணேல்லை:))
மாயாவைக் காணேல்லை:))
மாயாவைக் காணேல்லை:))
மாயாவைக் காணேல்லை:))
மாயாவைக் காணேல்லை:))//

வந்துட்டேஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்

மாய உலகம் said...

ஜெய்லானி said...
பாடல் அழகா இருக்கு . இன்னும் நிறைய எழுத முயற்சி செய்யுங்கள் :-)



நிறைய படங்கள் , வீடியோக்கள் இனைத்தால் பிளாக் லோட் ஆக நேரம் பிடிக்குது . :-)//

முதல் பாடல் கொடுத்து இம்சை கொடுத்திருக்கேன்... இதோட நிப்பாட்டிருவேன்னு நினச்சு சந்தோசப்படுறீங்களா.... நெவர்... இனி தான் பாட்டால உங்க காத கடிக்க போறேன்... காத கொஞ்சம் பட்டை தீட்டி வச்சிருங்க... அடுத்த வாட்டி வீடியோ இணைப்புகளை குறைத்துவிடுகிறேன்..... நன்றி பாஸ்

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...
அடுத்த ஆக்கம் காத்திருக்கு சகோ உங்கள் வரவுக்காய் ....//

இப்பொழுதே உங்கள் தளத்தை நோக்கி பாய்ந்து வந்து கொண்டிருக்கிறேன்....

இராஜராஜேஸ்வரி said...

அழகான பாடல் பகிர்வுக்கு பாராட்டுக்கள்

இராஜராஜேஸ்வரி said...

திறமைகள் கொட்டிக்கிடக்கும் தாங்கள் வாழ்வு பிரகாசிக்க வாழ்த்துக்கள்!

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
அழகான பாடல் பகிர்வுக்கு பாராட்டுக்கள்

திறமைகள் கொட்டிக்கிடக்கும் தாங்கள் வாழ்வு பிரகாசிக்க வாழ்த்துக்கள்!//

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மாலதி said...

சிறந்த செய்திகள் பாராட்டுகள் வியக்கும் படங்கள் தொடர்க.

முற்றும் அறிந்த அதிரா said...

அங்கின போவனா... இங்கின வருவனா? நேரமே கிடைக்குதில்லை மாயா அவ்வ்வ்வ்வ்:)). இப்ப்அத்தான் முழுமையாகப் படித்தேன். கலக்கல் தொகுப்பு.

படங்கள் சூப்பர்.

மாய உலகம் said...

மாலதி said...
சிறந்த செய்திகள் பாராட்டுகள் வியக்கும் படங்கள் தொடர்க.///

வாங்க...பாராட்டுக்கு நன்றி

மாய உலகம் said...

athira said...
அங்கின போவனா... இங்கின வருவனா? நேரமே கிடைக்குதில்லை மாயா அவ்வ்வ்வ்வ்:)). இப்ப்அத்தான் முழுமையாகப் படித்தேன். கலக்கல் தொகுப்பு.

படங்கள் சூப்பர்.//

அட... முழுமையா படிச்ச ஆதிஸ்ஸ்க்கு நன்றி

Unknown said...

படம்
விரைவில் வெளிவரும்
பெயர்-?

கதை, வசனம், பாடல்
இயக்கம்
மாய உலகம்
புலவர் சா இராமாநுசம்

Riyas said...

பாடகல் வரிகள் அழகாக இருக்கு நண்பா தொடர்ந்து எழ்துங்கள்..

காட்டான் said...

வாழ்த்துக்கள் மாப்பிள உங்களிடம் இப்பிடியான திறமைகள் இருப்பதற்கு.. எதிர்காலத்தில் நீங்க மிகச்சிறந்த ஒரு இயக்குனரா வரவேண்டுமையா இந்த காட்டான் மனசார வாழ்துகிறேன்யா...

மாய உலகம் said...

புலவர் சா இராமாநுசம் said...
படம்
விரைவில் வெளிவரும்
பெயர்-?

கதை, வசனம், பாடல்
இயக்கம்
மாய உலகம்
புலவர் சா இராமாநுசம்
//

ஹா ஹா ஹா நன்றி சகோ ஐயா

மாய உலகம் said...

Riyas said...
பாடகல் வரிகள் அழகாக இருக்கு நண்பா தொடர்ந்து எழ்துங்கள்..//

நன்றி நண்பா

மாய உலகம் said...

காட்டான் said...

வாழ்த்துக்கள் மாப்பிள உங்களிடம் இப்பிடியான திறமைகள் இருப்பதற்கு.. எதிர்காலத்தில் நீங்க மிகச்சிறந்த ஒரு இயக்குனரா வரவேண்டுமையா இந்த காட்டான் மனசார வாழ்துகிறேன்யா...
@@@

மனம் கனிந்த நன்றி மாம்ஸ்


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out