Monday 7 November, 2011

சகல கலா வல்லவர் - கமல ஹாசன்

சினிமாவைப் பற்றிய அத்தனை துறைகளிலும் அறிவைப் பெற்ற இந்தியக் கலைஞர்கள் யார்? யார்? என்று விரல் விட்டு எண்ணத் தொடங்கினால் அதில் முக்கியமாக கமல் அவர்கள் இருப்பார்.

முதல் படத்திலேயே (களத்தூர் கண்ணம்மா) சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல்!

இந்த படத்தில் நடிப்பதற்காக கமல் ஏவிஎமில் சென்ற பொழுது அவரை தூக்கி சென்றவர் பிரபல இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் அவர்கள்.

இந்த களத்தூர் கண்ணம்மாவில் நடிப்பதற்கு காரணமாக இருந்தவர் டாக்டர் சாரா ராமச்சந்திரன்.இவர் கமலின் தாயாருக்கு நெருங்கிய தோழி.

1967 - ல் டி.கே.எஸ். நாடக குழுவில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார் கமல். நடித்த முதல் நாடகம் 'அப்பாவின் ஆசை'.

சிறு வயதிலேயே கதகளியும்,கதக் நடனமும்,பரதம்,குச்சுபுடி கற்றுக்கொண்டவர்.

குங்ஃபூ, கராத்தே, மல்யுத்தம், குத்துச்சண்டை, சிலம்புச்சண்டை போன்றவற்றை கூடுதல் கவனம் செலுத்தி கற்றுக் கொண்டவர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பெங்காலி போன்ற பல மொழிகளில் நடித்து கலக்கியவர்...

பிரசாத் ஸ்டூடியோவில் அகேலா கிரேன் இறக்குமதி ஆகிருந்தது. அதை இரவோடு இரவாகச் சென்று பார்த்த முதல் நபர் கமல். பிறகு தான் பி.சி.ஸ்ரீரிராம் போன்றவர்கள் வந்து பார்த்தார்கள். தொழில் நுட்பத்தின் மீது கொண்ட தீராத ஆர்வம் தான் காரணம்..

இப்படி ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்வதில் மிகவும் ஆர்வம் உள்ளவர்.

நடனக் கலையைப் பயின்ற போது கமல் சொந்தமாக கலை நிகழ்ச்சிகளை நடத்த ஒரு குழுவை அமைத்தார். அவரது தலைமையில் அந்த குழுவில் சுமார் 20 பேர் இருந்தார்கள். அந்த குழுவுடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் போலிஸ் கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் சுமார் நான்கு மாத காலங்கள் தங்கி, தனது குழுவினருடன் என்பதற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தினார். அந்த சமயத்தில் கிருஷ்ணகுமாரி என்ற சின்னஞ்சிறு பெண்ணும் கமல் குழுவில் நடனமாடி வந்தாள். பார்ப்பதற்கு மிகவும் அழகாக தேவதை போல் இருந்த அந்தப் பெண்ணின் மீது 16 வயது கமலுக்கு அளவற்ற பிரேமை - காதல் என்று கூட சொல்லலாம். இருவரும் இணைபிரியாமல் நட்புடன் பழகினர். அந்த பெண்ணையே மணந்து கொண்டு நாட்டியப் பள்ளி ஒன்றை ஆரம்பித்து நடத்த வேண்டும் என்றெல்லாம் கமலின் மனதில் ஆசை ஊற்றெடுத்ததாம். ஆனால் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணகுமாரி நோயால் தாக்கப்பட்டு இறந்த போது கமலின் கண்களில் கண்ணீர் அருவியானது.

பிறகு மனதை ஒருவாராக தேற்றிக்கொண்டு சினிமாவில் நடன இயக்குனராக முயற்சியைத் தொடர்ந்தார் கமல். கமலுடன் ஆரம்ப காலத்திலேருந்தே நெருங்கி பழகி முதலில் கமலை உணர்ச்சிகள் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தி எடுத்தவர் ஆர்.சி.சக்தி அவர்கள்.
ஆனால் அதற்கு முன்பே கன்னியாக்குமாரி என்ற மலையாளப்படம் வெளிவந்தது..  பட்டாம் பூச்சி படம் வந்தது.ஆனால் தமிழ்திரையுலகிற்கு அடையாளம் காட்டிய பெரும்பங்கு இயக்குனர் பாலசந்தர் அவர்களையே சாரும். பாலசந்தர் யூனிட்டில் கமல் இடம்பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் காதல் மன்னன் ஜெமினி கனேசன் அவர்கள்.

அரங்கேற்றம் படத்தில் நடிப்பதற்காக கமல் 40 நாட்கள் படப்பிடிப்பிற்கு சென்றார். அதற்காக அவருக்கு கிடைத்த ஊதியம் 300 ரூபாய் தான். அதாவது தினம் 10 ரூபாய்.அதற்கு பாலசந்தர் கமலிடம் சொன்ன வார்த்தை... "இன்றைக்கு 300 ரூபாய் சம்பளம் வாங்கும் நீ மூன்று லட்சம் சம்பளம் வாங்கும் நாள் தொலைவில் இல்லை" என்றாராம்.

பரமகுடியில் பிறந்த கமலின் தந்தையார் பெயர் டி.சீனிவாசன் , தாயார் பெயர் ராஜலக்சுமி ... இதை லாவகமாக கவிஞர் வாலி அவர்கள் தசவதாரம் படத்தில் கல்லை மட்டும் கண்டால் பாடலில் முதல் சரணத்தில் "ராஜலெட்சுமி நாயகன் சீனிவாசன் தான் 
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்" என்று வரிகளை எழுதிருப்பார்.

'குடும்பத்தோட நான் வளர்ந்த சூழல் தான் கமலின் சினிமா பயணத்தின் ஆரம்பம். அவருக்கு ஐந்து வயசு இருக்கும்போதே எந்த விசயமாக இருந்தாலும் 'நீங்க என்ன நினைக்கிறீங்க?ன்னு அவர்கிட்ட வீட்ல கேப்பாங்களாம். இந்த கேள்வியை கேட்டாலே உற்சாகமாகிவிடுவாராம்.சின்ன வயதில் அவருடைய கருத்துக்குக் கொடுத்த முக்கியத்துவமும் மரியாதையும்தான் அவருடைய தனித்தன்மையை அவருக்கே புரிய வைத்திருக்கிறது.

எம்.ஜி.ஆருக்கு'நான் ஏன் பிறந்தேன்', சிவாஜிக்கு 'சவாலே சமாளி', ஜெயலலிதாவுக்கு 'அன்பு தங்கை' படங்களில் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி இருக்கிறார் கமல்!

இதில் கமலின் நடன அசைவுகளையும் கமலின் நோஞ்சான் உடம்பையும் கூர்ந்து கவனித்த எம்.ஜி.ஆர்., ஒரு நாள் கமலை அழைத்து உடலை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அட்வைஸ் சொன்னதோடு சில உடற்பயிற்சிகளை செய்தும் காட்டி தொடர்ந்து அப்படி செய்துவர வேண்டும், அப்பொழுது தான் உடல் வலுப்பெறும் புது பொழிவு பெறும் என்றார். மக்கள் திலகம் சொன்னதை இன்று வரை மனதில் வைத்து அவற்றை செய்து வருகிறார் கமல்.

'நினைத்தாலே இனிக்கும்' படம்தான் கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்த கடைசிப் படம்.

ரஜினிக்குப் பிடித்த படமான 'முள்ளும் மலரும்' படம் வெளியாவதற்குக் காரணமாக இருந்தவரே கமல் தான்!
ரஜினி ஒரு ஆரோக்கியமான போட்டி.. ஒரு போட்டி இருந்தால் தான் நமக்குள் ஒரு உற்சாகம் கிடைக்கும். அந்த ஒரு ஆரோக்கியமான போட்டி எனக்கு கொடுத்தவர் ரஜினி! அந்த போட்டிக்கிடையே எங்களுக்குள் இருக்கிற நட்பு கொள்ளை அழகு.

தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்து உலகப்புகழ் பெற்ற இரு ஜாம்பவன்கள். உண்மையில் நெஞ்சை நிமிர்த்தி மார்தட்டிக்கொள்ளலாம் இவர்களை போல் நெடுங்காலம் நல்ல நட்புடன் ஆரோக்கிய போட்டியுடன் வலம் வருபவர்கள் யார் என்று.
நடிகர் நாகேஷுக்கும், கமலுக்குமான உறவு 'அப்பா- மகன்' உறவு போன்றது. தன்னை 'கமல்ஜி' என்று நாகேஷ் அழைக்கும்போது, 'எதுக்கு அந்த ஜி' என்ற கமலிடம் , ' கமலுக்குள்ளே ஒரு நாகேஷ் இருக்கலாம். ஆனால், நாகேஷ்க்குள்ள ஒரு கமல் இருக்க வாய்ப்பே இல்லை' என்பாராம் நாகேஷ்!
"எனக்கு பிடித்தவர்களின் ஆசையை நிறைவேற்ற நான் செய்த முட்டாள்தனமான காரியம்தான் திருமணம் என்று ஒரு பேட்டியில் ஒப்பனாக சொல்லிருக்கிறார். பின்னே காந்தியின் தீவிர பக்தர் அல்லவா இவர்.

ஆர்.சி. சக்தி அவர்களின் உந்துதலால் கமல் எழுதிய முதல் கதை 'இனிக்கிளி' இந்த கதை தான் மலையாள இயக்குநர் சங்கரன் நாயர் இயக்கத்தில் 'ராஸலீலா' படமானது.

இவர் எழுதிய 'தாயம் ஒண்ணு' நாவல் பிரபல இதழில் தொடர் கதையாக வெளிவந்து 'ஆளவந்தான்' திரைப்படமானது.


ஒரு காலத்துல விடியற்காலையில் குளிச்சிட்டு ஈரத்துணியோடு பூஜையை முடிச்சிட்டு, வீட்ல இருக்குறவங்களுக்கு தீர்த்தம் கொடுத்திருக்கார்.

மூன்று முறை தேசிய விருதை வாங்கியவர்... ஃபிலிம்ஃபேர் விருதை 18 முறைக்கு மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல்தான்!

அவர் வாங்கிய விருதுகளை மட்டுமே பதிவிட்டால் பல தனிப்பதிவுகளே இடலாம் ...

ஒரு வானொளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல் தொலைபேசி உரையாடலில் எய்ட்ஸால் பாதிக்கப் பட்டோருடன் உரையாடி அவர்களின் வலியை பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சி... இதில் உள்ளம் கலங்கிய கமல் உடனே எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்துக்கொண்டார்.

புகழ்மிக்க கல்வி நிறுவனத்தில் மகள் ஸ்ருதியை சேர்க்க விரும்பினார் கமல். விண்ணப்பம் நிரப்பித் தரும்படி கேட்டார்கள். மதத்துக்கு எதிரே 'இந்தியா' என்றும் , ஜாதிக்கு எதிரே 'தமிழ்' என்றும் எழுதிக் கொடுத்தார்." நடைமுறை சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு எழுதாத காரணத்தால் உங்கள் குழந்தைக்கு இங்கே இடம் இல்லை" என்றது பள்ளி நிர்வாகம். "எனது மதமும், நாடும் முறையே இந்தியா, தமிழ் தான். இதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் பரவாயில்லை. இந்த லட்சணத்தில் நீங்கள் என் பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கும் உயர் தரக்கல்வி தேவையில்லை" என்று சொல்லிவிட்டு வெளியேறினார் கமல்.

பிறகு ஸ்ருதியின் பிறப்புச் சான்றிதழில் மதத்துக்கான இடத்தை வெற்றிடமா தான் விட்டிருக்கிறேன். போராடித்தான் அந்த சான்றிதழை வாங்கினேன். என்ன மதம்னு அப்ளிகேசனில் கேட்காத பள்ளியில்தான் மகள்களைப் படிக்க வச்சேன். என்னுடைய கொள்கைகளை எந்த சந்தர்ப்பத்துலும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கமல் கூறியுள்ளார்.

கமல் மறுப்புக்கொள்கையைக் கொண்டவர் என்றாலும்,
ஆத்திகத்தை கமல் விமர்சனம் செய்வதில்லை!

வீட்டில் நிறைய நாய்களை வளர்க்கிறார். கொஞ்ச காலத்துக்கு முன்பு இறந்துபோன நாய்க்காகக் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார்.

தன் உடலை தானம் செய்திருக்கிறார் கமல்.

கமலுக்கு பிடித்த டாப் டென் - 

தஞ்சை கோயில் கோபுரம் ,
அசைவ உணவு, கர்நாடக இசை - கானா பாட்டு,
 குளோஸ்- அப் கோணம்,
ஜெமினி - சாவித்ரி,
எம். ஆர். ராதாவின் நகைச்சுவை,
 காந்தியின் காஸ்ட்யூம்,
ரவிசங்கரின் சித்தார்,
சிவாஜி,
கே. பாலசந்தர்.

உலக நாயகனின் சாதனை கொஞ்சநஞ்சமா... சொல்லிக்கொண்டே போகலாம்.  இன்னும் சாதனைகளை குவிக்க உள்ள அவரை வாழ்த்த வயதில்லை.. எனவே அன்புடன் வணங்குவதே சரியானது.

உங்கள் பிரியமானவன்,

88 comments:

மகேந்திரன் said...

தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ நடிகர்கள்
வந்து வந்து போயிருக்கிறார்கள்...
தனித்திறமை இருந்தும் அதை வெளிக்கொணர முடியாத
தகுதியான இயக்குனர்கள் கிடைக்காமல்..
வந்த இடம் காணாமல் சென்றிருக்கிறார்கள்..
கிடைத்த சிறு வாய்ப்பை பயன்படுத்தி சிறு நூல் பிடித்து
மலை ஏறியவர்களும் இருக்கிறார்கள்...

மகேந்திரன் said...

நடிகர் கமலஹாசன் ...
அந்த பெயரை சொல்கையிலே தானாக நெஞ்சு நிமிர்ந்துகொள்ளும்,
தமிழ் சினிமா வரலாற்றுக்கு நடிகர் திலகத்துக்கு பின்னர் கிடைத்த
மாபெரும் நடிப்புக் குவியல்..
தான் நடித்து இயக்கி வந்த படங்களில் கூத்துப்பட்டறையில் இருந்து
சில நடிகர்களை தேர்வு செய்து...
அவர்களை உலகறியச் செய்த பெருமையும் அவருக்குண்டு...

மகேந்திரன் said...

அவரின் திரையுலக சாதனைகளை சொல்லி மாளாது...
அவர் பற்றிய ஒரு பதிவைக் கண்டதும் மனதுக்கு மகிழ்ச்சி...
உங்களுக்கு நன்றிகள் பல நண்பரே...

சக்தி கல்வி மையம் said...

ஆம் அன்புடன் வணங்குவதே சரி..

Unknown said...

என்ன மாய நலமா!

கமல் ஒரு பிறவிநடிகர்
என்பதில் ஐயமில்லை!
அவர் பற்றி பல அரிய செய்திகளைத் தந்தீர் நன்றி!

எங்கே மாயமானீர்..?

புலவர் சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி said...

தேசிய விருதுகளையும் தாண்டி தன் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றியதோடல்லாமல் , ரசிகர்களின் ரசனையை பல படி மேலே எடுத்துக்கொண்டு வந்ததே கமலின் மிகப்பெரிய சாதனை

அருமையான மாய உலகத்தின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>.

Unknown said...

happy birthday kamal...

Unknown said...

gd post boss

விச்சு said...

கமலுக்கு நிகர் கமல்தான். த.ம 5. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கோகுல் said...

எனது பல அபிமானப்படங்களின் நாயகன் கமல்ஹாசன்!
அவரைப்பற்றிய பல தவல்களை அவரது பிறந்த நாளான இன்று பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

vetha (kovaikkavi) said...

நல்ல சாயம் கொண்ட சிறந்த பதிவு மாயஉலகமே! ரசித்தேன்! வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com

தனிமரம் said...

நல்ல தேடல் மிக்கவர் கமல் அவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களும் சேரட்டும் !

செங்கோவி said...

தமிழில் பன்முகத் திறமை உள்ள கலைஞன்...கமல் ஒரு தமிழ் நடிகர் என்பது நமக்கெல்லாம் பெருமை தான்.

அம்பலத்தார் said...

கமல் கடந்துவந்த பாதையை ஆவணப்படுத்தியதுபோன்ற பதிவிற்கு நன்றிகள் ராஜேஸ்

RAMA RAVI (RAMVI) said...

சிறந்த அரிய தகவல்களுடன் கமல் பற்றிய பதிவு.நன்றி பகிர்வுக்கு.

குறையொன்றுமில்லை. said...

கமலுக்கு நிகர் கமலேதான்.

Unknown said...

கமல் சிறந்த நடிகர் என்பதில் ஐயமில்லை...

K.s.s.Rajh said...

கமல் பற்றிய அற்புதமான தொகுப்புக்கள்.

கலைஞானிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ராஜா MVS said...

கமலை பற்றிய பல அறிந்திராத தகவல்கள் தெரிந்து கொண்டேன்... ராஜேஷ்...

அவருடைய திறமைகளும், நல்ல பண்புகளும்(இந்தியா,தமிழ்) கண்டிப்பாக போற்றக்கூடியதே...

ராஜா MVS said...

எல்லோராலும் ரசிக்கும் வண்ணம்
மிக அருமையாக தொகுத்துள்ளீர்கள்... நண்பா...

வாழ்த்துகள்....

சந்திர வம்சம் said...

உலக[si="7"](குழந்தை )[/si]
நாயகன்


[im]http://chennai365.com/wp-content/uploads/general/2010/feb/Rajini-Picture.jpg[/im]

Yaathoramani.blogspot.com said...

சகலகலாவல்லவனின் சகல விஷயங்களையும்
தொட்டுச் செல்லும் தங்கள் பதிவு அருமை
உங்கள் உழைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
த.ம 8

ஷைலஜா said...

கமலைப்பற்றிய அருமையான பகிர்வு... சலங்கை ஒலியில் அவர் நடனம் கண்ணிலேயே நிற்கிறது,, பலகலைகள் அவர் கையில். தமிழ்மண் இப்படிப்பலகலைஞர்களை நமக்குத்தந்துகொண்டே இருக்கிறது!

காட்டான் said...

வணக்கம் மாப்பிள..
அருமையான தொகுப்பு.. கமலுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

vimalanperali said...

நடிகர் சிவாஜி அவர்களுக்கு அடுத்து யார் என்கிற வெற்றிடம் திரையுலகில் விழுந்தபோது அந்த இடத்தை நிரப்பிய கமல் அவர்கள் என்றுமே "கமல் தி கிரேட்"தான்.உங்களது பதிவிலிருந்த தகவல்கள் கட்டுரையையை கைதூக்கி விட்டது மிக முக்கியமாய்/

Anonymous said...

மகேந்திரன் said...
தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ நடிகர்கள்
வந்து வந்து போயிருக்கிறார்கள்...
தனித்திறமை இருந்தும் அதை வெளிக்கொணர முடியாத
தகுதியான இயக்குனர்கள் கிடைக்காமல்..
வந்த இடம் காணாமல் சென்றிருக்கிறார்கள்..
கிடைத்த சிறு வாய்ப்பை பயன்படுத்தி சிறு நூல் பிடித்து
மலை ஏறியவர்களும் இருக்கிறார்கள்...//

வாங்க நண்பா... மிக அழகாக திரைத்துறையில் நடக்கும் விசயங்களை சொல்லியிருக்கிறீர்கள்...

Anonymous said...

மகேந்திரன் said...
நடிகர் கமலஹாசன் ...
அந்த பெயரை சொல்கையிலே தானாக நெஞ்சு நிமிர்ந்துகொள்ளும்,
தமிழ் சினிமா வரலாற்றுக்கு நடிகர் திலகத்துக்கு பின்னர் கிடைத்த
மாபெரும் நடிப்புக் குவியல்..
தான் நடித்து இயக்கி வந்த படங்களில் கூத்துப்பட்டறையில் இருந்து
சில நடிகர்களை தேர்வு செய்து...
அவர்களை உலகறியச் செய்த பெருமையும் அவருக்குண்டு...//

மிக சரியாக சொன்னீர்கள்... திறமையானவர்களை தனது படங்களில் அறிமுகபடுத்தும் பெருந்தன்மையும் மிக்க கலைஞன் அவர்.

Anonymous said...

மகேந்திரன் said...
அவரின் திரையுலக சாதனைகளை சொல்லி மாளாது...
அவர் பற்றிய ஒரு பதிவைக் கண்டதும் மனதுக்கு மகிழ்ச்சி...
உங்களுக்கு நன்றிகள் பல நண்பரே...//

தங்களின் விரிவான பின்னூட்டத்துக்கு மனம் கனிந்த நன்றி நண்பரே!

Anonymous said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆம் அன்புடன் வணங்குவதே சரி..//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

புலவர் சா இராமாநுசம் said...
என்ன மாய நலமா!

கமல் ஒரு பிறவிநடிகர்
என்பதில் ஐயமில்லை!
அவர் பற்றி பல அரிய செய்திகளைத் தந்தீர் நன்றி!

எங்கே மாயமானீர்..?

புலவர் சா இராமாநுசம்//

வாங்க ஐயா! ... மாயமாகவில்லை ஐயா... சிறு வேளை காரணமாக சரியாக வர இயலவில்லை மன்னிக்கவும்...தங்களது அழகான பின்னூட்டத்துக்கு மனம் கனிந்த நன்றி ஐயா

Anonymous said...

இராஜராஜேஸ்வரி said...
தேசிய விருதுகளையும் தாண்டி தன் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றியதோடல்லாமல் , ரசிகர்களின் ரசனையை பல படி மேலே எடுத்துக்கொண்டு வந்ததே கமலின் மிகப்பெரிய சாதனை

அருமையான மாய உலகத்தின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>.//

வாங்க சகோ! தங்களின் ரசனையான பின்னூட்டத்துக்கு மனம் கனிந்த நன்றி.

Anonymous said...

ரியாஸ் அஹமது said...
happy birthday kamal...

gd post boss//

வாங்க நண்பா... தங்களுக்கு ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

விச்சு said...
கமலுக்கு நிகர் கமல்தான். த.ம 5. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.//

வாங்க நண்பா.. அவருக்கு நிகர் அவர் தான்... கருத்துக்கு நன்றி நண்பா!

Anonymous said...

கோகுல் said...
எனது பல அபிமானப்படங்களின் நாயகன் கமல்ஹாசன்!
அவரைப்பற்றிய பல தவல்களை அவரது பிறந்த நாளான இன்று பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!//

வாங்க கோகுல்... தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

kavithai (kovaikkavi) said...
நல்ல சாயம் கொண்ட சிறந்த பதிவு மாயஉலகமே! ரசித்தேன்! வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

தனிமரம் said...
நல்ல தேடல் மிக்கவர் கமல் அவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களும் சேரட்டும் !//

வாங்க நண்பரே! கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

செங்கோவி said...
தமிழில் பன்முகத் திறமை உள்ள கலைஞன்...கமல் ஒரு தமிழ் நடிகர் என்பது நமக்கெல்லாம் பெருமை தான்.//

வாங்க் நண்பரே! உண்மையில் உலக அளவில் தமிழரின் பெருமையை கொண்டு சேர்க்கும் பங்கில் கமலுக்கு முக்கிய இடம் உண்டு.... நமக்கெல்லாம் உண்மையில் பெருமை தான்... கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!

Anonymous said...

அம்பலத்தார் said...
கமல் கடந்துவந்த பாதையை ஆவணப்படுத்தியதுபோன்ற பதிவிற்கு நன்றிகள் ராஜேஸ்//

வாங்க சகோ! தங்களது கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.

Anonymous said...

RAMVI said...
சிறந்த அரிய தகவல்களுடன் கமல் பற்றிய பதிவு.நன்றி பகிர்வுக்கு.//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

Lakshmi said...
கமலுக்கு நிகர் கமலேதான்.//

வாங்கம்மா... கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

அப்பு said...
கமல் சிறந்த நடிகர் என்பதில் ஐயமில்லை...//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

K.s.s.Rajh said...
கமல் பற்றிய அற்புதமான தொகுப்புக்கள்.

கலைஞானிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

வாங்க நண்பா.. கருத்துக்கு மிக்க நன்றி

Anonymous said...

ராஜா MVS said...
கமலை பற்றிய பல அறிந்திராத தகவல்கள் தெரிந்து கொண்டேன்... ராஜேஷ்...

அவருடைய திறமைகளும், நல்ல பண்புகளும்(இந்தியா,தமிழ்) கண்டிப்பாக போற்றக்கூடியதே...

எல்லோராலும் ரசிக்கும் வண்ணம்
மிக அருமையாக தொகுத்துள்ளீர்கள்... நண்பா...

வாழ்த்துகள்....//

வாங்க நண்பரே! தங்களது அருமையான கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.

Anonymous said...

சந்திர வம்சம் said...//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

Ramani said...
சகலகலாவல்லவனின் சகல விஷயங்களையும்
தொட்டுச் செல்லும் தங்கள் பதிவு அருமை
உங்கள் உழைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
த.ம 8//

வாங்க சகோ! தங்களது கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.

Anonymous said...

ஷைலஜா said...
கமலைப்பற்றிய அருமையான பகிர்வு... சலங்கை ஒலியில் அவர் நடனம் கண்ணிலேயே நிற்கிறது,, பலகலைகள் அவர் கையில். தமிழ்மண் இப்படிப்பலகலைஞர்களை நமக்குத்தந்துகொண்டே இருக்கிறது!//

வாங்க சகோ! தங்களது அருமையான கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.

Anonymous said...

காட்டான் said...
வணக்கம் மாப்பிள..
அருமையான தொகுப்பு.. கமலுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..//

வாங்க மாம்ஸ்... வணக்கம். கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி மாம்ஸ்.

Anonymous said...

விமலன் said...
நடிகர் சிவாஜி அவர்களுக்கு அடுத்து யார் என்கிற வெற்றிடம் திரையுலகில் விழுந்தபோது அந்த இடத்தை நிரப்பிய கமல் அவர்கள் என்றுமே "கமல் தி கிரேட்"தான்.உங்களது பதிவிலிருந்த தகவல்கள் கட்டுரையையை கைதூக்கி விட்டது மிக முக்கியமாய்//

வாங்க சகோ! உண்மையில் சிவாஜி வரிசையில் கமல் தன்னை நிருபித்துவிட்டார்... நிருபித்துக்கொண்டே இருப்பார்... கருத்துக்கு மிக்க நன்றி.

rajamelaiyur said...

அருமையான நடிகர் கமல்

rajamelaiyur said...

இன்று என் வலையில் ..

தொண்டர்களா ? குண்டர்களா ? பா. ம .க வில் குழப்பம்

ananthu said...

உலகநாயகனைப் பற்றிய உன்னதமான பதிவு , சுவாரஷ்யமான புது தகவல்களை தந்ததற்கு நன்றி ... கமல்ஹாசன் அவர்களை பற்றி கலைமகன் கமல் ... என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளேன் , வருமாறு அழைக்கிறேன் ...

சென்னை பித்தன் said...

த.ம.9
மகா கலைஞன் பற்றிய நல்ல பகிர்வு.

Anonymous said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
அருமையான நடிகர் கமல்//

வாங்க நண்பா! கருத்துக்கு நன்றி.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

ஒரு ரசிகனின்
பார்வை ...
ரசித்து
படித்து
மகிழத்தான்
இந்த பதிவு .
கமலை ரசிக்காமல் ஒரு தமிழன் இருக்க மாட்டன்.
கமலை ரசிகக்கதாவன் தமிழனாக இருக்க மாட்டன்.
ரசிப்புடன் .
யானைக்குட்டி

Anonymous said...

ananthu said...
உலகநாயகனைப் பற்றிய உன்னதமான பதிவு , சுவாரஷ்யமான புது தகவல்களை தந்ததற்கு நன்றி ... கமல்ஹாசன் அவர்களை பற்றி கலைமகன் கமல் ... என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளேன் , வருமாறு அழைக்கிறேன் ...//

வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி.. உடனே வருகிறேன்...

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

ஒரு ரசிகனின்
பார்வை ...
ரசித்து
படித்து
மகிழத்தான்
இந்த பதிவு .
கமலை ரசிக்காமல் ஒரு தமிழன் இருக்க மாட்டன்.
கமலை ரசிகக்கதாவன் தமிழனாக இருக்க மாட்டன்.
ரசிப்புடன் .
யானைக்குட்டி

Anonymous said...

சென்னை பித்தன் said...
த.ம.9
மகா கலைஞன் பற்றிய நல்ல பகிர்வு.//

வாங்க ஐயா! கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...
ஒரு ரசிகனின்
பார்வை ...
ரசித்து
படித்து
மகிழத்தான்
இந்த பதிவு .
கமலை ரசிக்காமல் ஒரு தமிழன் இருக்க மாட்டன்.
கமலை ரசிகக்கதாவன் தமிழனாக இருக்க மாட்டன்.
ரசிப்புடன் .
யானைக்குட்டி//

வாங்க நண்பரே! அட அசத்தலா சொல்லிருக்கீங்க.... கருத்துக்கு மிக்க நன்றி.

Angel said...

அறியாத பல புதிய தகவல்கள் .மிகவும் அருமையான தொகுப்பு .வாழ்த்துக்கள் ராஜேஷ் .

முற்றும் அறிந்த அதிரா said...

மாயா... மாயா.... என்ன இது ஆளைக் காணேல்லை:)))).

லேட்டா வந்திருக்கிறேன் என்று கோபமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

முற்றும் அறிந்த அதிரா said...

கமல் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க, உண்மைதான் அவர் சகலகலா வல்லவர்தான், ஆனால் எனக்கென்னமோ அவரைப் பிடிப்பதில்லை:((((.

முற்றும் அறிந்த அதிரா said...

நீங்க எங்கேயும் எப்போதும் பாட்டைப் போட, நான் புதுஷா வந்திருக்கிற படமாக்கும் என விழுந்தடிச்சு ஓபின் பண்ணினால்.... பழைய பாட்டு... பாட்டு சூப்பர், ஆனா நான்...


“எங்கேயும் எப்போதும்” படம் பார்க்கோணும் என ஒற்றைக்காலில நிற்கிறேன், டிவிடிக்குச் சொல்லியிருக்கிறேன், இன்னும் வரவில்லை:((((.... நெட்டில் எங்கும் நேரடியாகப் பார்க்க முடியாமல் இருக்கு.

படம் டவுன்லோட் பண்ணிப்பார்க்க பிடிக்காதெனக்கு.... யூ ரியூப்புக்கு வந்தால் நன்றாக இருக்கும், எப்ப வருகுதோ தெரியாதே......

முற்றும் அறிந்த அதிரா said...

உன்னை நினைச்சேன்.... பாடல் சூப்பரோ சூப்பர்... நான் என்பக்கத்தில் போட நினைத்திருந்தேன்.....

ஒவ்வொரு வரியிலும் அர்த்தம் இருக்கு... படமும் சூப்பர்....

கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்...
காத்தடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்....

M.R said...

கமல் பற்றிய அறியத்தகவல்கள் ,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

கலைஞானியின் பிறந்த நாளுக்கேற்றாற் போல அவரின் தனித்துவமான வாழ்வியல் + திறமைகளை அலசும் காத்திரமான பதிவினைத் தந்திருக்கிறீங்க.

Anonymous said...

angelin said...
அறியாத பல புதிய தகவல்கள் .மிகவும் அருமையான தொகுப்பு .வாழ்த்துக்கள் ராஜேஷ் .//

வாங்க... தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

athira said...
மாயா... மாயா.... என்ன இது ஆளைக் காணேல்லை:)))).

லேட்டா வந்திருக்கிறேன் என்று கோபமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).//

ஹி ஹி ... நானும் கொஞ்சம் பிசி சோ நோ பிராப்ளம்... ;-)

Anonymous said...

athira said...
கமல் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க, உண்மைதான் அவர் சகலகலா வல்லவர்தான், ஆனால் எனக்கென்னமோ அவரைப் பிடிப்பதில்லை:((((.//

why? why ? why? ஏன் பிடிக்கலை... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

athira said...
நீங்க எங்கேயும் எப்போதும் பாட்டைப் போட, நான் புதுஷா வந்திருக்கிற படமாக்கும் என விழுந்தடிச்சு ஓபின் பண்ணினால்.... பழைய பாட்டு... பாட்டு சூப்பர், ஆனா நான்...


“எங்கேயும் எப்போதும்” படம் பார்க்கோணும் என ஒற்றைக்காலில நிற்கிறேன், டிவிடிக்குச் சொல்லியிருக்கிறேன், இன்னும் வரவில்லை:((((.... நெட்டில் எங்கும் நேரடியாகப் பார்க்க முடியாமல் இருக்கு.

படம் டவுன்லோட் பண்ணிப்பார்க்க பிடிக்காதெனக்கு.... யூ ரியூப்புக்கு வந்தால் நன்றாக இருக்கும், எப்ப வருகுதோ தெரியாதே.....//

என்னது யூ டியுப்லயாஆஆஆஆஆஆஆஆ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

athira said...
உன்னை நினைச்சேன்.... பாடல் சூப்பரோ சூப்பர்... நான் என்பக்கத்தில் போட நினைத்திருந்தேன்.....

ஒவ்வொரு வரியிலும் அர்த்தம் இருக்கு... படமும் சூப்பர்....

கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்...
காத்தடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்....//

எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்.. எப்படியோ முந்திகிட்டேன்... ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுக்கும் தங்கமே.. ஞான தங்கமே...

Anonymous said...

M.R said...
கமல் பற்றிய அறியத்தகவல்கள் ,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி//

வாங்க கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

நிரூபன் said...
இனிய காலை வணக்கம் பாஸ்,

கலைஞானியின் பிறந்த நாளுக்கேற்றாற் போல அவரின் தனித்துவமான வாழ்வியல் + திறமைகளை அலசும் காத்திரமான பதிவினைத் தந்திருக்கிறீங்க.//

வாங்க பாஸ்..! தங்களது கருத்துக்கு மிக்க நன்றி பாஸ்

இந்திரா said...

சகலகலா வல்லவர் பற்றிய பதிவு..

உண்மையிலேயே எல்லா தரப்பு மக்களையும் ஈர்க்கும் நடிப்புக்கலை கமலிடம் நிச்சயம் உள்ளது.

பகிர்விற்கு நன்றி.

ஹேமா said...

தமிழர் என்பதைத் தாண்டி எனக்கும் பிடித்த நடிகரை வரிசைப்படுத்தியிருக்கிறீர்கள் மாயா.அருமை.அடுத்த தரத்தில் சூர்யாவை நினைத்திருக்கிறேன் !

Anonymous said...

இந்திரா said...
சகலகலா வல்லவர் பற்றிய பதிவு..

உண்மையிலேயே எல்லா தரப்பு மக்களையும் ஈர்க்கும் நடிப்புக்கலை கமலிடம் நிச்சயம் உள்ளது.

பகிர்விற்கு நன்றி.//

வாங்க சகோ! தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

ஹேமா said...
தமிழர் என்பதைத் தாண்டி எனக்கும் பிடித்த நடிகரை வரிசைப்படுத்தியிருக்கிறீர்கள் மாயா.அருமை.அடுத்த தரத்தில் சூர்யாவை நினைத்திருக்கிறேன் !//

வாங்க... கண்டிப்பாக சூர்யா அடுத்த தரத்தில் வருவார்.. தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.

முற்றும் அறிந்த அதிரா said...

//ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுக்கும் தங்கமே ஞானத் தங்கமே..///

மாயா.. சூடு கண்ட பூனையல்லவா நீங்க:))) அதுதான் இவ்வரி பிடிச்சிருக்குதுபோல:))).

இனிமேலாவது கண்டதும் காதல் என விழுந்திடாமல், நம்பர் பொருத்தம் பாருங்க மாயா.... ஜாதகத்தைக்காட்டிலும் நம்பர் பொருத்தத்தில் எனக்கு அதிக நம்பிக்கை.

நம்பர்கள் சேரும் நம்பரானால்... நிறைய விஷயங்கள் அதில் அடங்கியிருக்கு.

ஒரு நட்பாகட்டும், வலையுலகிலாகட்டும்... நமக்கு நன்கு பிடித்தோரின் நம்பரைச் செக் பண்ணினால் அது பொருத்தமான நம்பராகத்தான் இருக்கும். இல்லையெனில் எப்படி ஒட்டிப் பழகினாலும் அப்பப்ப மனம் உடைந்து போய்விடும். சோ.. இனிமேல் ஜாகத்தோடு நம்பரையும் பாருங்க ஓக்கை? நான் சொல்வதைக் கேட்பீங்களோ?:)))))

[im]http://www.datersbook.com/wp-content/uploads/2011/05/cat-question-215x300.jpg[/im]

Anonymous said...

athira said...
//ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுக்கும் தங்கமே ஞானத் தங்கமே..///

மாயா.. சூடு கண்ட பூனையல்லவா நீங்க:))) அதுதான் இவ்வரி பிடிச்சிருக்குதுபோல:))).

இனிமேலாவது கண்டதும் காதல் என விழுந்திடாமல், நம்பர் பொருத்தம் பாருங்க மாயா.... ஜாதகத்தைக்காட்டிலும் நம்பர் பொருத்தத்தில் எனக்கு அதிக நம்பிக்கை.

நம்பர்கள் சேரும் நம்பரானால்... நிறைய விஷயங்கள் அதில் அடங்கியிருக்கு.

ஒரு நட்பாகட்டும், வலையுலகிலாகட்டும்... நமக்கு நன்கு பிடித்தோரின் நம்பரைச் செக் பண்ணினால் அது பொருத்தமான நம்பராகத்தான் இருக்கும். இல்லையெனில் எப்படி ஒட்டிப் பழகினாலும் அப்பப்ப மனம் உடைந்து போய்விடும். சோ.. இனிமேல் ஜாகத்தோடு நம்பரையும் பாருங்க ஓக்கை? நான் சொல்வதைக் கேட்பீங்களோ?:)))))//

ஹா ஹா ஹா.... நம்பர பாக்குறதா.. இது என்ன லாட்டரி சீட்டா.. உண்மை தான் நியுமுரலாஜியில் நிறைய விசயங்கள் அடங்கிருக்கு... சில நேரங்களில் வாங்கும் தியேட்டர் டிக்கெட், பஸ் டிக்கட், இப்படி ஏதாவது ஒரு வகையில் அந்த நம்பர்களை கூட்டினால் நிறைய முறை ஒரே நம்பர் வந்து என்னை வியப்பில் ஆழ்த்திருக்கு... கருத்துக்கு நன்றி

அன்புடன் மலிக்கா said...

கமலைப் பற்றி நிறைய விஷயங்கள் அழகாய் அருமையாய் சொல்லியிருக்கிறீங்க மாயவரே!
வாழ்த்துகள்

முற்றும் அறிந்த அதிரா said...

இண்டைக்கு ஆருடைய கண்ணிலயும் படாமல் ஒளிச்சிருப்பம், தினப் பலனில சொன்னது ஒளிச்சிருக்கட்டாம் அல்லது கால்ல கண்டமாமே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))))).

[im]http://th05.deviantart.net/fs6/150/i/2005/018/d/a/Shy_Kitty_by_Shellzoo5.jpg[/im]

முற்றும் அறிந்த அதிரா said...

ம்ஹூம்.... மாயாவைக் காணேல்லை.......

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcS5jWnA9b1EkO4FrrBrLXqvxn0n7PObGrqX5QNJpNScN93qfWG8WfPK922M[/im]

Anonymous said...

அன்புடன் மலிக்கா said...
கமலைப் பற்றி நிறைய விஷயங்கள் அழகாய் அருமையாய் சொல்லியிருக்கிறீங்க மாயவரே!
வாழ்த்துகள்//

வாங்க சகோ! தங்களது கருத்துக்கு மிக்க நன்றி!

Anonymous said...

athira said...
இண்டைக்கு ஆருடைய கண்ணிலயும் படாமல் ஒளிச்சிருப்பம், தினப் பலனில சொன்னது ஒளிச்சிருக்கட்டாம் அல்லது கால்ல கண்டமாமே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))))).//

ஹா ஹா... அப்ப ஒளிஞ்சுக்குங்க... முதலை பின்னால... ;-))))

Anonymous said...

athira said...
ம்ஹூம்.... மாயாவைக் காணேல்லை.......//

தோ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்... ;-)

முற்றும் அறிந்த அதிரா said...

மாயா ஆரோ செய்வினை வச்சிட்டாங்கபோல:)) காலையில் (74) என இருந்தது, இப்போ (71) ஆகிட்டுதே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

Anonymous said...

athira said...
மாயா ஆரோ செய்வினை வச்சிட்டாங்கபோல:)) காலையில் (74) என இருந்தது, இப்போ (71) ஆகிட்டுதே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).//

டாப் கமேண்டட்டர்ஸ்ல உள்ள பெரிய மைனஸே... ரெண்டு நாள் கருத்து போடலைன்னாலும்.. கருத்துக்கள் மைனஸாயிட்டேருக்கும் ஹா ஹா

எம்.ஞானசேகரன் said...

கமல் பற்றிய இந்த தொகுப்பு நன்றாக இருந்தது. இதை சேமித்தும் வைத்துக் கொண்டேன்.

மாய உலகம் said...

கவிப்ரியன் said...
கமல் பற்றிய இந்த தொகுப்பு நன்றாக இருந்தது. இதை சேமித்தும் வைத்துக் கொண்டேன்.//

வாங்க நண்பா.. நன்றி.


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out