Tuesday 9 August, 2011

உலக மகா நடிப்புடா சாமி


வெள்ளி திரையிலும், சின்ன திரையிலும் நடிகர்களின் நடிப்பை பார்த்து பிரமித்து வியந்து ரசித்திருக்கிறோம்.... ஆனால் அதையே உங்கள் பார்வையில் நேரில் பலர் நடித்துக்கொண்டிருக்கின்றனர் ... அதையும் தான் கொஞ்சம் ரசித்து(......) பார்ப்போமே... 


நாடகமேடை இவ்வுலகம்
நடிகர்கள் நாம் அதில்

·         நெஞ்சிலே நஞ்சு கொண்ட வஞ்சகர்கள் நல்லவர்கள் போல் பேசுவார்கள் ; நடந்து கொள்வார்கள்.
·          
·         உருவ அமைப்பு, தோற்றம், அணிந்திருக்கும் உடைகள் குரல் ஒலியை வைத்து யாரையும் சாதாரணமாக எடை போட்டு விடுவார்கள். இதனால் நல்லவர்களையும், கெட்டவர்களாக நினைப்பார்கள். போவோர், வருவோரைப் பார்த்து புறம் பேசுவார்கள், தூற்றுவார்கள்.

·         இரு கோஷ்டிகளுக்கும் இடையே குஷ்தி, சண்டை, கைகலப்பு, நடந்து இருக்காது. வாய்ப்பேச்சு அளவிலே மட்டும் தகராறு நடந்து இருக்கும். ஆனால் அடித்தார்கள் , உதைத்தார்கள், சித்ரவதை செய்து கொடுமை படுத்தினார்கள் என கூனியும் குறுகியும் உடம்பை வளைத்தும் நிமிர்த்தியும் நெளிந்தும் காண்பிப்பார்கள். குரல் ஒலியுலும் வெளிப்படுத்துவார்கள்.

·         இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் ஒருவர் அடி, உதை வாங்கி இருப்பார். ஆனால் கூனி, குறுகாமல் உடம்பை வளைத்து, நிமிர்த்தாமல் அடி உதை சித்ரவதைக்கு கொடுமைக்கு ஆளாகவில்லை என ஒன்றுமே நடக்காத மாதிரி பந்தா பண்ணுவார்கள்.

·         கண்களால் பார்க்காததைப் பார்த்த்தாகவும், பார்த்ததைப் பார்க்கவே இல்லை, எனவும் தம் கண்களால் பிரதிபலித்துக் காட்டுவார்கள்.

·         தம் வாயினால் சொல்லாததை, சொல்லியதாகவும், சொன்னதை சொல்லவே இல்லை என்றும் மறுப்பார்கள், வாக்கு வாதம் பண்ணுவார்கள்

·         தம் காதுகளால் கேட்ட தை, கேட்கவே இல்லை என்றும் , கேட்காத்தை கேட்டேன் என்றும் சாதிப்பார்கள்.


·         நடக்காத்தை நடந்த மாதிரியும், நடந்த்தை நடக்காத மாதிரியும் பாசாங்கு செய்வார்கள்.

·         இல்லாத ஒன்றை இருப்பது போலவும் , இருக்கின்ற ஒன்றை இல்லாத்து போலவும் பிரமையை ஏற்படுத்துவார்கள்.

·         தெரிந்த்தை தெரியாத்து போலவும், தெரியாத்தை போலவும் மிகவும் அலட்டிக்கொள்வார்கள்

·         பொய்யை உண்மை போலவும், உண்மையைப் பொய் போலவும், பேசும் தோரணையிலே சாமர்த்தியமாக மறைப்பார்கள்; சமாளிப்பார்கள்; நிருபிக்க முயலுவார்கள்
 நன்றி - ஆசிரியர் திரு.சுதர்சனா அவர்கள் (நடிப்பு கலை என்ற புத்தகத்திலிருந்து)
w
w
யார் எப்படி நாடகமாடுனா நமக்கென்ன நாம நார்மலா இருப்போம் சரி தான நண்பர்களே...   

டிஸ்கி: என்ன நண்பர்களே சும்மா போறீங்க ஓட்டு பெட்டியில் நாலு ஊம குத்தா குத்திட்டுப்போங்க....

31 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் நடிப்பு

அவசரகால முதலுதவி சிகிச்சைகள்! தெரிஞ்சுக்கலாமே

கோகுல் said...

நெஞ்சிலே நஞ்சு கொண்ட வஞ்சகர்கள் நல்லவர்கள் போல் பேசுவார்கள் ; நடந்து கொள்வார்கள்.//
ஜாக்கிரதை!

கோகுல் said...

நெஞ்சிலே நஞ்சு கொண்ட வஞ்சகர்கள் நல்லவர்கள் போல் பேசுவார்கள் ; நடந்து கொள்வார்கள்.
ஜாக்கிரதை!

பொ.முருகன் said...

என்னதான்,சொல்லவர்ரிங்க.

கோகுல் said...

நடக்காத்தை நடந்த மாதிரியும், நடந்த்தை நடக்காத மாதிரியும் பாசாங்கு செய்வார்கள்.//
செஞ்சாலும் செய்வாங்க கெரகம் புடிச்சவங்க!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அசத்துராங்களே....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நானும் இதை பார்த்து நடிப்பு கத்துக்க போறேன்...

vidivelli said...

சகோ எங்கதான் தேடி அதற்கேற்ற படங்கள் எடுத்து
சரியான முகபாவனைக்கேற்றாவாறு எழுதிறீங்களே...
நீங்க எழுதியதையும் படத்தையும் ஒப்பிடுகையில்
அந்தந்த பண்புடையவர்கள் இப்பிடித்தான் இருப்பார்கள் போலே இருக்கிறது..
மிகச்சிறப்பான பதிவு...
வாழ்த்துக்கள்..

கூடல் பாலா said...

நல்லாத்தான் நடிக்கிறாங்க ...

மகேந்திரன் said...

நடிப்புகள் பலவிதம்.
உலகமெனும் நாடகமேடையில்
நடிகர்களும்
நடிப்புகளும் பலவிதம்.
அழகு படைப்பு.

Yaathoramani.blogspot.com said...

படிப்பதற்கும் பார்ப்பதற்கும் எளிதாகத் தெரிந்தாலும்
இதற்காக மிகவும் மெனக்கெட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்
படங்களும் விளக்கங்களும் அத்தனை பொருத்தம்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

நாலு ஊமை குத்து ....குத்தியாச்சி
உள்காயம் ரொம்ப இருந்தா உங்கள் முகம் எப்படி
இருக்கும் நண்பா ஹி ஹி

சக்தி கல்வி மையம் said...

படங்களை சேர்க்க ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீங்க போல..
அந்த உழைப்பிற்கு ஹேட்ஸ் ஆப் ..

M.R said...

மனிதர்கள் பலவிதம்
நிஜம் குறைவு

நிஜம் தேட வேண்டும் ,கொடுமை தான் ,இருந்தாலும் உண்மையும் அதுதான் .

மாய உலகம் said...

தமிழ்வாசி - Prakash said... 1
முதல் நடிப்பு

//அவசரகால முதலுதவி சிகிச்சைகள்! தெரிஞ்சுக்கலாமே//

வாங்க வாசி நன்றி

மாய உலகம் said...

கோகுல் said... 2
நெஞ்சிலே நஞ்சு கொண்ட வஞ்சகர்கள் நல்லவர்கள் போல் பேசுவார்கள் ; நடந்து கொள்வார்கள்.//
ஜாக்கிரதை!

நடக்காத்தை நடந்த மாதிரியும், நடந்த்தை நடக்காத மாதிரியும் பாசாங்கு செய்வார்கள்.//
செஞ்சாலும் செய்வாங்க கெரகம் புடிச்சவங்க!

வாங்க நண்பா..கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

விக்கியுலகம் said... 4
//thanks!//

thank u machi

மாய உலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said... 5
//அசத்துராங்களே....

நானும் இதை பார்த்து நடிப்பு கத்துக்க போறேன்...//

வாங்க நண்பா... கத்துக்க வாழ்த்துக்கள் நன்றி

மாய உலகம் said...

vidivelli said... 7
//சகோ எங்கதான் தேடி அதற்கேற்ற படங்கள் எடுத்து
சரியான முகபாவனைக்கேற்றாவாறு எழுதிறீங்களே...
நீங்க எழுதியதையும் படத்தையும் ஒப்பிடுகையில்
அந்தந்த பண்புடையவர்கள் இப்பிடித்தான் இருப்பார்கள் போலே இருக்கிறது..
மிகச்சிறப்பான பதிவு...
வாழ்த்துக்கள்..//

வாங்க சகோ...தங்களது வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது...நன்றி சகோ

மாய உலகம் said...

koodal bala said... 8
//நல்லாத்தான் நடிக்கிறாங்க ...//

வாங்க நண்பா...நடிக்கட்டும் நல்லது தானே..நடிப்பை கற்று மேடையில் வெளிக்காட்டுவோம்...

மாய உலகம் said...

மகேந்திரன் said... 9
//நடிப்புகள் பலவிதம்.
உலகமெனும் நாடகமேடையில்
நடிகர்களும்
நடிப்புகளும் பலவிதம்.
அழகு படைப்பு.//

வாங்க நண்பா...வாழ்த்துக்கு சந்தோசம் மிளிர்கிறது, நன்றி

மாய உலகம் said...

Ramani said... 10
//படிப்பதற்கும் பார்ப்பதற்கும் எளிதாகத் தெரிந்தாலும்
இதற்காக மிகவும் மெனக்கெட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்
படங்களும் விளக்கங்களும் அத்தனை பொருத்தம்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//

வாங்க சகோதரரே...! தங்களது வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது... நன்றிகள்

மாய உலகம் said...

ரியாஸ் அஹமது said... 11
//நாலு ஊமை குத்து ....குத்தியாச்சி
உள்காயம் ரொம்ப இருந்தா உங்கள் முகம் எப்படி
இருக்கும் நண்பா ஹி ஹி//

வாங்க நண்பா.. உள்காயம் இருந்தா சார்மி படம் போல இருக்கும் .. எவ்வளவு உள்காயம் இருந்தாலும் வலிக்காத மாதிரியே நடிப்போம்...ஹா ஹா ஹா நன்றி

மாய உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said... 12
//படங்களை சேர்க்க ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீங்க போல..
அந்த உழைப்பிற்கு ஹேட்ஸ் ஆப் ..//

வாங்க வாழ்த்துக்கு நன்றி நண்பரே

vanathy said...

சூப்பர் படங்கள் & விளக்கங்கள். இதெல்லாம் உங்க சொந்த அனுபவம் போல இருக்கே!!!

shanmugavel said...

அனைத்து நடிப்புகளையும் காட்டிவிட்டீர்கள்.நன்று.

மாய உலகம் said...

பொ.முருகன் said... 3
//என்னதான்,சொல்லவர்ரிங்க.//

ஹி ஹி தோ வந்துட்டீங்கள்ள... நடிப்ப சொல்ல வந்தேன் பாஸூ

மாய உலகம் said...

vanathy said... 25
//சூப்பர் படங்கள் & விளக்கங்கள். இதெல்லாம் உங்க சொந்த அனுபவம் போல இருக்கே!!!//

வாங்க.. சொந்த அனுபவமும் இருக்கு ஹா ஹா.. வாழ்த்துக்கு நன்றிங்க

மாய உலகம் said...

shanmugavel said... 26
//அனைத்து நடிப்புகளையும் காட்டிவிட்டீர்கள்.நன்று.//

வாங்க நண்பா நன்றி

Ayyammal said...

பெண்களுக்கே அதிகமாக இடமளித்துல்லீர்கள், உங்கள் பார்வையில் பெண்கள் எமற்றுகாரர்களா

மாய உலகம் said...

!! அய்யம்மாள் !! said... 31
//பெண்களுக்கே அதிகமாக இடமளித்துல்லீர்கள், உங்கள் பார்வையில் பெண்கள் எமற்றுகாரர்களா//

வாங்க சகோ...இதில் ஆண்கள், பெண்கள் விதிவிலக்கல்ல இது போன்று இரு தரப்பிலும் இருக்கலாம்....இது போல் நம்மை சுற்றி உங்கள் பார்வையில் யார் வேண்டுமானாலும் இருப்பார்கள் நாம் அவர்கள் நடிப்பை எச்சரிக்கை உணர்வுடன் பார்க்க வேண்டும் தவிர,.. படங்கள் சும்மா மாடல்களுக்காக நன்றி


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out