Saturday 8 October, 2011

இப்ப நீ ஏன் சிரிச்ச?

வாழ்வின் முக்கியச் செய்திகள் நகைச்சுவையுடன் கலந்து கொடுக்கப்பட வேண்டியவை என்பது என் கருத்து. ஆனால், நான் நகைச்சுவையாக ஒன்றைச் சொல்லும்போது, அதை ஜோக்காக மட்டுமே பார்த்து


அதன் பின்னே பொதிந்திருக்கும் முக்கியமான செய்தியைத் தவறவிடுபவர்களே அதிகம்!

நகைச்சுவை என்பது ஒரு குணம் அல்ல. அது கடைப்பிடிக்க வேண்டிய ஒரு தன்மையல்ல. இயல்பாகவே ஆனந்தமாக இருக்கும் ஒருவரது பேச்சில் சிரிப்பும் நகைச்சுவையும் கலந்திருக்கும். ஆனந்தம் என்பது அபூர்வமாகிவிட்டதால்தான், நகைச்சுவை என்பது பேசுவதற்குரிய ஒரு பொருளாகிவிட்டது.

போக்களத்துக்குப் போய் பாருங்கள். கிடைக்கும் இடைவெளியில் சிப்பாய்கள் சிரித்து விளையாடிக்கொண்டு இருப்பார்கள். அதே சமயம். வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் சந்தோசமாகச் சிரித்துக்கொண்டு இருப்பவர்கள் எவ்வளவு பேர் என்றும் பாருங்கள்.

ஆபத்து இருக்கும் இடத்துலயே சந்தோசமாக இருக்க முடிகிறதே. பிறகு ஏன் விளையாட்டாகச் செய்ய வேண்டியதை முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு செய்கிறார்கள்?


மனித உயிர்களை விடவும் பணத்தைப் பெரிதாக நினைப்பவர்கள் முகத்தில் எப்படி சந்தோசம் வரும்? எப்படி சிரிப்பு வரும்? இவர்களுக்கு கிச்சு கிச்சு மூட்டினாலும் கோபம் வருமே தவிர, மகிழ்ச்சியான சிரிப்பு வராது.



மல்லாடி ஹல்லி சுவாமி கர்நாடகத்தில் வாழ்ந்த உன்னதமான யோகி. எந்த அளவுக்கு அவர் தெளிவாகவும், தன்னை அர்பணித்தவராகவும் இருந்தார் என்பதற்க்குப் பல நிகழ்வுகள் உண்டு. திங்கள் கிழமைகளில் அவர் ஆயுர்வேத மருத்துவராகச் செயல்படுவார். அதிகாலை 4 மணிக்கு அமர்ந்தார் என்றால், இரவு 7 மணி வரை, தன்னை நாடி வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பார்.
அது 'மருத்துவர் - நோயாளி' உறவாகவே இருக்காது. அவர் இருக்கும் இடம் பண்டிகை போல் கொண்டாட்டமாக இருக்கும். தன்னிடம் வரும் ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனி ஜோக் வைத்திருப்பார். வந்தவர் தன் வேதனை மறந்து, இறுக்கம் தளர்ந்து சிரித்திருக்கையில், சிகிச்சை நிகழும். நோய் பறந்தோடும். நன்றி - ஒரு மகான்

உங்கள் பிரியமானவன்,

75 comments:

கோகுல் said...

ஆபத்து இருக்கும் இடத்துலயே சந்தோசமாக இருக்க முடிகிறதே. பிறகு ஏன் விளையாட்டாகச் செய்ய வேண்டியதை முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு செய்கிறார்கள்?
//

ராஜேஷ்!கலக்கிட்டிங்க போங்க!

இமா க்றிஸ் said...

முதல் பந்தியில் சொல்லியிருப்பவை உண்மைதான் ராஜேஷ். ஸ்மைலி போட்டுவிட்டுச் சொல்லும் சீரியசான விடயங்களுக்கும் இதுதான் நடக்கிறது. ;))

கடம்பவன குயில் said...

காமெடி. எனக்கு மிகவும் பிடித்தது..ஆனால் சுட்டுப்போட்டாலும் எனக்கு காமெடி வரவே வராது. காமெடியா எழுதறவங்க...மொக்க காமெடி பண்றவங்க எழுதறவங்கன்னு பதிவா தேடிபோய் படிப்பேன்...நல்ல பதிவு நன்றி.

arasan said...

இந்த அவசர உலகத்தில் சிரிப்பதற்கு நேரம் இல்லாமல் பலர் சுழன்று கொண்டிருக்கின்றனர் ..
பின்னர் மருத்துவமனை நோக்கி செல்வர் ..
வாய்விட்டு சிரித்தால் .... போதும் ..நல்ல பகிர்வு .. வாழ்த்துக்கள்

கடம்பவன குயில் said...

//ஆனந்தம் என்பது அபுர்வமாகிவிட்டதால் தான் நகைச்சுவை என்பது பேசுவதற்குரிய பொருளாகிவிட்டது//

இதுதான் உண்மை.

சசிகுமார் said...

நாகேஷ் நம்மளோட சாய்ஸ் எப்பவுமே...

thendralsaravanan said...

சிரிப்பு மனிதனுக்கு மட்டுமே வாய்த்த நல் வாய்ப்பு!அதை பயன் படுத்த தெரியாதவர் முட்டள்கள்!
சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க(பைத்தியம்னு சொல்லிடுவாங்கன்னு பயம் வந்திருச்சா)....

குறையொன்றுமில்லை. said...

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகுமாமே?

SURYAJEEVA said...

super

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

அட, தலைவர் காமெடி, அதுவும் நம்ம காமெடி, நெஞ்ச தொட்டுட்டீங்க ராஜேஷ்...

சென்னை பித்தன் said...

த.ம.6.
அருமையாச் சொன்னீங்க ராஜேஷ்!

Unknown said...

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்
சகோ! நன்றி

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

அருமையான தகவல் நண்பா

சத்ரியன் said...

ராஜேஷ்,

”இருவதாம் நூற்றாண்டு வரைக்கும் வாழ்ந்த மனிதர்களுக்கு சிரிக்கும் தன்மை இருந்ததாம்” என்னும் வரிகள் (இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து) நம் சந்ததிகள் படிக்கும் பாடத்தில் இடம் பெற்றாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை.

மனித இனம் தன் குணங்களிலிருந்து வெகுவேகமாக விலகி போய்க்கொண்டிருக்கிறது.

Admin said...

சிரிப்பு பற்றிய நல்ல கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி நண்பா!

Unknown said...

மாப்ள அனைத்தும் நச் விஷயங்களே..நன்றி!

M.R said...

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்

புன்னகை நட்பை வளர்க்கும் ,நம் மனதையும் ,உடலையும் காக்கும்

பகிர்வுக்கு நன்றி சகோ

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

RAMA RAVI (RAMVI) said...

மல்லாடி ஹல்லி சுவாமி பற்றிய தகவல் அருமை.சிரிப்பே பல நோய்களை தீர்க்க கூடிய ஒரு நல்ல மருந்து.அருமையான பதிவு ராஜேஷ். வாழ்த்துக்கள்.

rajamelaiyur said...

சிரிப்பு நல்ல மருந்து

ராஜா MVS said...

நல்ல அருமையான தகவல் நண்பா...

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரி
நகைச்சுவையானாலும் அதனுள் ஒரு
பொருள் இருக்குமாயின் அந்த நகைச்சுவை தானே
காலம் கடந்து நிற்கிறது
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
த.ம 12

மாய உலகம் said...

கோகுல் said... 1

ராஜேஷ்!கலக்கிட்டிங்க போங்க!//

வாங்க நண்பா.. கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said...

இமா said... 2
முதல் பந்தியில் சொல்லியிருப்பவை உண்மைதான் ராஜேஷ். ஸ்மைலி போட்டுவிட்டுச் சொல்லும் சீரியசான விடயங்களுக்கும் இதுதான் நடக்கிறது. ;))//

வாங்க மேம்... கருத்துக்கு மிக்க நன்றி...

மாய உலகம் said...

கடம்பவன குயில் said... 3
காமெடி. எனக்கு மிகவும் பிடித்தது..ஆனால் சுட்டுப்போட்டாலும் எனக்கு காமெடி வரவே வராது. காமெடியா எழுதறவங்க...மொக்க காமெடி பண்றவங்க எழுதறவங்கன்னு பதிவா தேடிபோய் படிப்பேன்...நல்ல பதிவு நன்றி.//

நமக்கு காமெடி வர்லைன்னாலும் பரவாயில்லைங்க... அதை லைக் செய்து சிரித்துக்கொண்டிருந்தால் போதும் கடம்பவனம்... பகிர்வுக்கு நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் said...

சிரிக்க வைக்ரவங்க எப்பவுமே நல்ல நடிகர்கள் தான்.... ஏன்னா அது எல்லோருக்கும் வராது...

Unknown said...

ராஜேஷ்,
சிரிக்கத் தெரிந்தால் வாழ்வின் எந்த சூழலையும் எதிர் கொள்ளலாம். ரொம்ப அருமையா மிகவும் எளிமையாவும் எழுதியிருக்கீங்க.

மாய உலகம் said...

அரசன் said... 4
இந்த அவசர உலகத்தில் சிரிப்பதற்கு நேரம் இல்லாமல் பலர் சுழன்று கொண்டிருக்கின்றனர் ..
பின்னர் மருத்துவமனை நோக்கி செல்வர் ..
வாய்விட்டு சிரித்தால் .... போதும் ..நல்ல பகிர்வு .. வாழ்த்துக்கள்//

வாங்க நண்பா... கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா

மாய உலகம் said...

கடம்பவன குயில் said... 5
//ஆனந்தம் என்பது அபுர்வமாகிவிட்டதால் தான் நகைச்சுவை என்பது பேசுவதற்குரிய பொருளாகிவிட்டது//

இதுதான் உண்மை.//

சரியாக சொன்னீங்க கடம்பவன குயில்... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

சசிகுமார் said... 6
நாகேஷ் நம்மளோட சாய்ஸ் எப்பவுமே...//

எனக்கும் நாகேஷ் தான் ரொம்ப பிடிக்கும் நண்பா

மாய உலகம் said...

thendralsaravanan said... 7
சிரிப்பு மனிதனுக்கு மட்டுமே வாய்த்த நல் வாய்ப்பு!அதை பயன் படுத்த தெரியாதவர் முட்டள்கள்!
சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க(பைத்தியம்னு சொல்லிடுவாங்கன்னு பயம் வந்திருச்சா)....//

ஹா ஹா நீங்க சொன்னதிலருந்தே சிரிச்சுக்கிட்டே தாங்க இருக்கேன்... எனக்கு பயம் வருல... எதிர்ல இருக்குறவங்களுக்கு தான் பயம் வந்திருச்சூஊஊஊஊஊ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

Lakshmi said... 8
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகுமாமே?//

ஆமாம்மா... நோய்விட்டு போகும் ... நல்லா வாய்விட்டு சிரிங்க ஆயுசு கூடும்...

மாய உலகம் said...

suryajeeva said... 9
super//

வாங்க சகோ! கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

Butti Paul said... 10
அட, தலைவர் காமெடி, அதுவும் நம்ம காமெடி, நெஞ்ச தொட்டுட்டீங்க ராஜேஷ்...//

வாங்க நண்பா... ஹா ஹா கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

சென்னை பித்தன் said... 11
த.ம.6.
அருமையாச் சொன்னீங்க ராஜேஷ்!//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

புலவர் சா இராமாநுசம் said... 12
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்
சகோ! நன்றி

புலவர் சா இராமாநுசம்//

வாங்க சகோ ஐயா.... சரியாக சொன்னீர்கள்... கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

வைரை சதிஷ் said... 13
அருமையான தகவல் நண்பா//

வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

சத்ரியன் said... 14
ராஜேஷ்,

”இருவதாம் நூற்றாண்டு வரைக்கும் வாழ்ந்த மனிதர்களுக்கு சிரிக்கும் தன்மை இருந்ததாம்” என்னும் வரிகள் (இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து) நம் சந்ததிகள் படிக்கும் பாடத்தில் இடம் பெற்றாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை.

மனித இனம் தன் குணங்களிலிருந்து வெகுவேகமாக விலகி போய்க்கொண்டிருக்கிறது.//

வாங்க நண்பா... சிறப்பாக சொன்னீர்கள்... பின்னால் வரும் இயந்திரகாலத்தை நினைத்தால் தான் வேதனையாக இருக்கிறது.. இருந்தாலும் சார்லி சாப்ளின், நாகேஷ் இவர்கள் கொஞ்சம் மாற்றத்தை தருவார்கள்.. அதை நினைத்து ஆறுதல் கொள்ளலாம்.. மனம் கனிந்த நன்றி நண்பா...

மாய உலகம் said...

Abdul Basith said... 15
சிரிப்பு பற்றிய நல்ல கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி நண்பா!//

வாங்க நண்பா.. கருத்துக்கு மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said...

விக்கியுலகம் said... 16
மாப்ள அனைத்தும் நச் விஷயங்களே..நன்றி!//

வாங்க மாம்ஸ்... கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

M.R said... 17
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்

புன்னகை நட்பை வளர்க்கும் ,நம் மனதையும் ,உடலையும் காக்கும்

பகிர்வுக்கு நன்றி சகோ//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said... 18
அருமை.//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said...

RAMVI said... 19
மல்லாடி ஹல்லி சுவாமி பற்றிய தகவல் அருமை.சிரிப்பே பல நோய்களை தீர்க்க கூடிய ஒரு நல்ல மருந்து.அருமையான பதிவு ராஜேஷ். வாழ்த்துக்கள்.//

வாங்க..உங்களது அருமையான கருத்துக்கு மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said... 20
சிரிப்பு நல்ல மருந்து//

வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

ராஜா MVS said... 21
நல்ல அருமையான தகவல் நண்பா...//

வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

Ramani said... 28
மிகச் சரி
நகைச்சுவையானாலும் அதனுள் ஒரு
பொருள் இருக்குமாயின் அந்த நகைச்சுவை தானே
காலம் கடந்து நிற்கிறது
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
த.ம 12//

வாங்க சகோ! அழகாக கருத்து சொன்னீர்கள் மிக்க நன்றி சகோ

மாய உலகம் said...

தமிழ்வாசி - Prakash said... 32
சிரிக்க வைக்ரவங்க எப்பவுமே நல்ல நடிகர்கள் தான்.... ஏன்னா அது எல்லோருக்கும் வராது...//

வாங்க நண்பா...கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

அப்பு said... 33
ராஜேஷ்,
சிரிக்கத் தெரிந்தால் வாழ்வின் எந்த சூழலையும் எதிர் கொள்ளலாம். ரொம்ப அருமையா மிகவும் எளிமையாவும் எழுதியிருக்கீங்க.//

வாங்க சகோ! தங்களது கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.

அம்பலத்தார் said...
This comment has been removed by the author.
அம்பலத்தார் said...

இப்ப நீ ஏன் சிரிச்ச........
ஏன் சாமி இப்படி மிரட்டுறிங்க. நான் ஒன்றும் சிரிக்கலையே சும்மா எதாவது படிக்கலாம் என்றுதானே இந்தப்பக்கம் வந்தனான்.

அம்பலத்தார் said...

நகைச்சுவை எப்பவும் எங்களை உற்சாகமாக வைத்திருக்கும். நல்ல பதிவு வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பான சிரிப்பு பகிர்வு அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்>

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்கிப்புட்டீங்கங்கோ......

காட்டான் said...

வணக்கம் மாப்பிள.. 
அருமையா கலக்கியெடுத்திட்டீங்களே வாழ்த்துக்கள்..!!!

மாய உலகம் said...

அம்பலத்தார் said... 62
இப்ப நீ ஏன் சிரிச்ச........
ஏன் சாமி இப்படி மிரட்டுறிங்க. நான் ஒன்றும் சிரிக்கலையே சும்மா எதாவது படிக்கலாம் என்றுதானே இந்தப்பக்கம் வந்தனான்.
நகைச்சுவை எப்பவும் எங்களை உற்சாகமாக வைத்திருக்கும். நல்ல பதிவு வாழ்த்துக்கள்//

வாங்க... ஹா ஹா... கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி.

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said... 64
சிறப்பான சிரிப்பு பகிர்வு அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்>//

வாங்க மேடம்... கருத்துக்கு பாராட்டுக்கு வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 65
கலக்கிப்புட்டீங்கங்கோ......//


வாங்க பிரதர்... கருத்துக்கு மிக்க நன்றி... :-)

மாய உலகம் said...

காட்டான் said... 66
வணக்கம் மாப்பிள..
அருமையா கலக்கியெடுத்திட்டீங்களே வாழ்த்துக்கள்..!!!//

வாங்க மாம்ஸ்... கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி.

Admin said...

தமிழ்மணத்தில் மூன்றாவது இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா!

VISWAM said...

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும். அருமை. எங்கே சார் எல்லோரும் சிரிக்கிறார்கள். சிரிக்கக் கூட பாடம் நடத்த வேண்டும்.

மாய உலகம் said...

மாய உலகம் said...
Abdul Basith said...
தமிழ்மணத்தில் மூன்றாவது இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா!//

வாங்க நண்பா... செய்திக்கு ரொம்ப நன்றி நண்பா... நானே இது வரை பார்க்கவில்லை... இதோ இப்பொழுதே பார்த்துவிடுகிறேன்..

மாய உலகம் said...

[im]http://i1099.photobucket.com/albums/g389/rajeshnedveera80/tm.png[/im]

தமிழ்மணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க காரணாமாயிருந்த பார்வைகளுக்கும், மறுமொழிகள் அளித்த நண்பர்களுக்கும், வாசகர் பரிந்துரை வாக்குகளுக்கும் மனம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.. தமிழ்மணத்திற்க்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி

மாய உலகம் said...

viswam said...
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும். அருமை. எங்கே சார் எல்லோரும் சிரிக்கிறார்கள். சிரிக்கக் கூட பாடம் நடத்த வேண்டும்.//

வாங்க சார்! நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே... உண்மையான அன்பு நிறைந்த இடத்தில் நிஜமான புன்னகை இதமாக இருந்துகொண்டே இருக்கும்.. ஆனால் இயந்திரவாழ்க்கையில் வயிரை மட்டுமே பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்... கருத்துக்கு மிக்க நன்றி.

முற்றும் அறிந்த அதிரா said...

ஹா..ஹா...ஹா... தலைப்பே சிரிக்க வைக்குதே.... நில்லுங்க முழுக்க படிச்சிட்டு, இன்னும் 3 மணி நேரத்தின் பின்புதான் பின்னூட்டம் போடுவேன், இப்போதானே வந்தேன்... அவ்வ்வ்வ்வ்வ்:))).

ஊசிக்குறிப்பு: சனி ஞாயிற்றுக் கிழமைகளில் ஆரும் புதிய தலைப்பிடக்கூடாதென கூகிள் ஆண்டவருக்கு நேர்த்தி வச்சிட்டேன்:))))), சே.. எங்கேயும் மீ ட 1ஸ்டா இருக்க முடியல்ல...:(((((

முற்றும் அறிந்த அதிரா said...

மாயா... என்ன இது புதுப்பழக்கம்... சாமத்தில எல்லாம் நித்திரை கொள்றீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

முற்றும் அறிந்த அதிரா said...

[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcR7Pb5_7euendgyEliptqAXi59XgWqQQfo21qcnlkEVwpUPRucHog[/im]

நிரூபன் said...

ஆமா அந்த சிரிப்பு மூலம் நோய் குணப்படுத்தும் ரிஷி எங்கே இருக்கார்?

நிரூபன் said...

பாஸ். அந்த ரிஷியோட முகவரியினை எடுத்து கொடுங்க.
நானும் போகனும்

நிரூபன் said...

நகைச்சுவைகளை ரசிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய குறிப்புக்களோடு ரசிக்கும் வண்ணம் ஒரு துணுக்கு + ஒரு வீடியோவையினையும் தந்திருக்கிறீங்க

ரசித்தேன் பாஸ்.

மாய உலகம் said...

athira said...
ஹா..ஹா...ஹா... தலைப்பே சிரிக்க வைக்குதே.... நில்லுங்க முழுக்க படிச்சிட்டு, இன்னும் 3 மணி நேரத்தின் பின்புதான் பின்னூட்டம் போடுவேன், இப்போதானே வந்தேன்... அவ்வ்வ்வ்வ்வ்:))).

ஊசிக்குறிப்பு: சனி ஞாயிற்றுக் கிழமைகளில் ஆரும் புதிய தலைப்பிடக்கூடாதென கூகிள் ஆண்டவருக்கு நேர்த்தி வச்சிட்டேன்:))))), சே.. எங்கேயும் மீ ட 1ஸ்டா இருக்க முடியல்ல...:(((((//

ஹா ஹா பதிவு அவ்வளவு பெருசாவா இருக்கூஊஊ டேக் யுவர் டைம் நல்லா ரசிச்சு படிங்க... வந்தவங்களை கவனிக்காம விட்டுட்டனே.. இந்தாங்க ரீஈஈஈஈஈ
[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTAWO_UWYIacJPFxM2oKdHwxFEVFvimAvt4Rx_XINJ_dKuli-5KSg[/im]
கூகுள் ஆண்டவருக்கு நேர்த்தி தான் வச்சிட்டீங்க... படையல் பண்ணி பூஜையே செய்து.... பதிவ போட்டுட்டோம்ம்ம்ம்ம்ம் :-))))))

மாய உலகம் said...

athira said...
மாயா... என்ன இது புதுப்பழக்கம்... சாமத்தில எல்லாம் நித்திரை கொள்றீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).//

நாங்க எங்க நித்திரை கொண்டோம்... சாமத்துல நெட் பிராப்ளம் ஆகிடுச்சுஊஊஊஊ... முதலையும் நானும் நெட்டை பற்றி டிஸ்கஸ் செஞ்சிக்கிட்டிருந்தோம்... அதேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

மாய உலகம் said...

[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSz5Y12utyeaegqXO6-sUObhrXKKNBGhev-DV90Lg54cDz--Tb0gw[/im]

கம்புயூட்டருக்கு தூரம் நின்னு சிரிச்சாச்சூஊஊஊஊ

மாய உலகம் said...

நிரூபன் said...
ஆமா அந்த சிரிப்பு மூலம் நோய் குணப்படுத்தும் ரிஷி எங்கே இருக்கார்?//

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQL1PkOVm1zmbZ-0VKEUOFeafUbCNwWLOwsF5bFEEOmmbO9nukH[/im]
அவர் எங்கே என தெரியவில்லை.. ஆனால் அவரைப்பற்றி சொன்ன இவரின் ஈஷா இயற்கை வைத்தியத்தை நாடலாம்...

மாய உலகம் said...

நிரூபன் said...
பாஸ். அந்த ரிஷியோட முகவரியினை எடுத்து கொடுங்க.
நானும் போகனும்//

[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQdxsOPqu26N6qILR43wp0kTK3e49s-4Vm351UuUHNnOlSazO87[/im]
அட்ரஸ் நோட் செஞ்சுக்குங்க நண்பா.. no:6,விவேகானந்தர் தெரு,துபாய் குறுக்கு சந்து, துபாய். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

நிரூபன் said...
நகைச்சுவைகளை ரசிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய குறிப்புக்களோடு ரசிக்கும் வண்ணம் ஒரு துணுக்கு + ஒரு வீடியோவையினையும் தந்திருக்கிறீங்க

ரசித்தேன் பாஸ்.//

உங்களது ரசிப்பு தன்மையே... எனது இந்த நிமிட சந்தோசம் பாஸ்.. கருத்துக்கு இதயம் கனிந்த நன்றிகள்.


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out